திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 98

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரைமுத்திக் கிருந்த முனிவரும் தேவரும்ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்பத்திமை யால்இப் பயனறி யாரே.

உரை · meaning

இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும், சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினான். ஆனாலும், இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல், இறைவனையும் தம்மையும் வேறு வேறாக எண்ணிக்கொண்டு அவ்விறைவன்மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள், இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

To sages and gods performing penance on mountain peaks and in caves, seeking to know God and attain liberation, God himself graciously declared the supreme wisdom by which Sadasivamurthy can be known. And yet, without the awareness that God and they are one, thinking of God and themselves as separate, those who hold devotion for God and sing his praise remain without receiving the fruit of the very supreme wisdom that God gave.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும்,

    To sages and gods performing penance on mountain peaks and in caves, seeking to know God and attain liberation,

  • வரி 2

    முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினான்.

    sages and gods alike, God himself graciously declared the supreme wisdom by which Sadasivamurthy can be known.

  • வரி 3

    இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல், இறைவனையும் தம்மையும் வேறு வேறாக எண்ணிக்கொண்டு,

    Yet without the awareness that God and they are one, thinking of God and themselves as separate,

  • வரி 4

    அவ்விறைவன்மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள், இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

    those who hold devotion for God and sing his praise remain without receiving the fruit of the very supreme wisdom that God gave.

திருமந்திரம் பாடல் #98

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com