தொடர்ந்து படிக்கread this section continuously
பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்றதற்பரன் கற்பனை யாகும் சராசரத்துஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.
உரை · meaning
காளையும் (இடபம்), மானும், மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவன் அவன். அவனுடைய கற்பனையிலிருந்தே (எண்ணத்திலிருந்தே) இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் தோன்றின. என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி, அடியவனாகிய என் தலைமேல், தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து, ஆகமங்கள் அனைத்தையும் எங்கள் நந்தியாகிய அவன் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.
He is the self-manifest God who bears the bull, the deer and the mazhu, his battle-axe. All of this universe and everything within it arose from his very thought. Out of the compassion he held for me, he granted me the true reality, and upon this servant's head he placed his own beneficent golden feet, and, our Nandi, standing as our own guru, gave us all the Agamas.
வரி வாரியாக · line by line
- வரி 1
காளையும் (இடபம்), மானும், மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவன் அவன்.
He is the self-manifest God who bears the bull, the deer and the mazhu, his battle-axe.
- வரி 2
அவனுடைய கற்பனையிலிருந்தே (எண்ணத்திலிருந்தே) இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் தோன்றின.
All of this universe and everything within it arose from his very thought.
- வரி 3
என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி, அடியவனாகிய என் தலைமேல்,
Out of the compassion he held for me, he granted me the true reality, and upon this servant's head,
- வரி 4
தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து, ஆகமங்கள் அனைத்தையும் எங்கள் நந்தியாகிய அவன் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.
he placed his own beneficent golden feet, and, our Nandi, standing as our own guru, gave us all the Agamas.
திருமந்திரம் பாடல் #89





