திருமூலர் அருளிய திருமந்திரம்
குரு பாரம்பரியம்

பாயிரம் பாடல் 67–72 (6 பாடல்கள்)

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்என்றிவர் என்னோ டெண்மரும் ஆமே.

உரை · meaning

இறைவனே குருவாய் நந்தி தேவராக வந்து உண்மைப் பொருளை உபதேசித்து அருள் பெற்று 'நாதர்' என்று பெயர் பெற்றவர்கள் யாரெனில்: சிவயோகத்தில் சிறந்திருந்ததால் 'சிவயோக மாமுனிவர்' என்று பெயர் பெற்ற சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர்; தில்லையில் வந்து இறைவனின் திருநடனத்தைக் கண்டுகளித்த, ஆதிசேஷனின் அவதாரமான, பாதி மனித உருவமும் பாதி பாம்பு உருவமும் கொண்ட பதஞ்சலி முனிவர்; தன் இடைவிடாத தவத்திற்காக இறைவனிடமிருந்து புலியின் கால்களைப் பெற்றதால் 'வியாக்கிரமபாதர்' என்று பெயர் பெற்றவர்; இவர்களுடன் திருமூலனாகிய யானும் சேர்ந்து மொத்தம் எட்டு பேர்கள் ஆவோம்.

God himself came as Nandi Deva to be our guru, taught us the true meaning, and by his grace we came to bear the name "Nathar." Who are we? The four, Sanakar, Sanandhanar, Sanathanar and Sanatkumarar, who came to be called the great sages of Sivayoga because they excelled in that yoga; the sage Patanjali, an incarnation of Adishesha, half in human form and half in serpent form, who came to Thillai and watched God's own sacred dance with delight; and the one called Vyagrapadar, who received a tiger's feet from God for his unceasing penance. Together with these, I myself, Thirumoolan, make eight in all.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனே குருவாய் நந்தி தேவராக வந்து உண்மைப் பொருளை உபதேசித்து, அருள் பெற்று 'நாதர்' என்று பெயர் பெற்றவர்களைத் தேடினால்,

    If you seek those who received God's own grace, who came as Nandi Deva our guru and taught the true meaning, and so came to bear the name Nathar,

  • வரி 2

    சிவயோகத்தில் சிறந்திருந்ததால் 'சிவயோக மாமுனிவர்' என்று பெயர் பெற்ற சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர்,

    the four, Sanakar, Sanandhanar, Sanathanar and Sanatkumarar, who came to be called the great sages of Sivayoga because they excelled in that yoga,

  • வரி 3

    தில்லையில் வந்து இறைவனின் திருநடனத்தை வணங்கிக் கண்டுகளித்த, ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரும், தன் தவத்திற்காகப் புலியின் கால்களைப் பெற்ற வியாக்கிரமபாதரும்,

    the sage Patanjali, an incarnation of Adishesha, who came to Thillai and worshipped, watching God's own sacred dance with delight, and Vyagrapadar, who received a tiger's feet for his penance,

  • வரி 4

    இவர்களுடன் திருமூலனாகிய யானும் சேர்ந்து மொத்தம் எட்டு பேர்கள் ஆவோம்.

    together with these, I myself, Thirumoolan, make eight in all.

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

உரை · meaning

குருநாதராகிய நந்தியின் அருளினால்தான் யாம் 'நாதர்' என்ற பெயர் பெற்றோம். நந்தியின் அருளினால்தான், இறந்து கிடந்த இடையனாகிய மூலனைக் கண்டு அழுதுகொண்டிருந்த பசுக்களின்மேல் இரக்கம் கொண்டு, அவனின் உடலில் யாம் புகுந்தோம். நந்தியின் அருள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் என்ன செய்துவிட முடியும்? நந்தியின் அருளினால்தான், அவர் காட்டிய வழியின்படியே நானும் இருந்தேன்.

It was only by the grace of Nandi, our guru, that we came to bear the name Nathar. It was only by Nandi's grace that, moved by compassion for the cows weeping over Moolan, the cowherd who lay dead, we entered his body. Without Nandi's grace, what could be accomplished in this land? It was only by Nandi's grace that I too have remained here, following the very path he showed.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    குருநாதராகிய நந்தியின் அருளினால்தான் யாம் 'நாதர்' என்ற பெயர் பெற்றோம்.

    It was only by the grace of Nandi, our guru, that we came to bear the name Nathar.

  • வரி 2

    நந்தியின் அருளினால்தான், இறந்து கிடந்த இடையனாகிய மூலனைக் கண்டு அழுதுகொண்டிருந்த பசுக்களின்மேல் இரக்கம் கொண்டு, அவனின் உடலில் யாம் புகுந்தோம்.

    It was only by Nandi's grace that, moved by compassion for the cows weeping over Moolan, the cowherd who lay dead, we entered his body.

  • வரி 3

    நந்தியின் அருள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் என்ன செய்துவிட முடியும்?

    Without Nandi's grace, what could be accomplished in this land?

  • வரி 4

    நந்தியின் அருளினால்தான், அவர் காட்டிய வழியின்படியே நானும் இருந்தேன்.

    It was only by Nandi's grace that I too have remained here, following the very path he showed.

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடுஇந்த எழுவரும் என்வழி யாமே.

உரை · meaning

இறைவனே குருநாதராக இருந்து அருளிய மந்திரங்களைப் பெற்ற எம்மிடம் சீடர்களாக இருந்து, அந்த மந்திரங்களைப் பெற்ற குருவழிமுறையில் வந்தவர்கள்: மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி நாதன், கஞ்ச மலையன் ஆகிய ஏழு பேர்கள். இவர்கள் ஏழு பேரும் என்வழியில் வந்தவர்கள் ஆவார்கள்.

Those who came as disciples to me, receiving the mantras I myself received while God stood as our guru, and who thus continued that line of gurus, are seven: Malangan, Indiran, Soman, Piraman, Rudran, Kalangi Nathan and Kancha Malaiyan. These seven are the ones who follow in my own line.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனிடமிருந்து பெற்ற மந்திரங்களை என்வழியில் பெற்றவர்களில் முதலாமவன் மாலாங்கன்.

    The first among those who received the mantras from God, following in my line, is Malangan.

  • வரி 2

    பின் வந்தவர்கள் இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன் ஆகியோர்.

    After him came Indiran, Soman, Piraman and Rudran.

  • வரி 3

    காலாங்கி நாதனும் கஞ்ச மலையனும் அவர்களுடன் சேர்ந்தனர்.

    Kalangi Nathan and Kancha Malaiyan joined them.

  • வரி 4

    இந்த ஏழு பேரும் என்வழியில் வந்தவர்கள் ஆவார்கள்.

    These seven are the ones who follow in my own line.

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டுநால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகெனநால்வரும் தேவராய் நாதரா னார்களே.

உரை · meaning

மந்திரம் பெற்ற ஏழு பேர்களில் முதல் நால்வராகிய இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன் ஆகியோர், திசைக்கு ஒருவராய் நான்கு திசைகளுக்கும் நாதர்களாக இருந்தனர். குருவிடம் பெற்ற மந்திரத்துடன் அவர்களின் இறையனுபவமும் இறைவனின் அருளும் சேர்ந்து பல்வேறு பொருள்களை அவர்கள் கைக்கொண்டனர். தாங்கள் பெற்ற அருளையெல்லாம் மற்றவர்களும் பெற்று இன்புற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். அவர்கள் நால்வரும் தேவர்களாகவும், மற்றவர்களுக்குக் குருநாதர்களாகவும் ஆனார்கள்.

The first four among the seven who received the mantras, Indiran, Soman, Piraman and Rudran, each stood as guru over one of the four directions. The mantra received from their guru joined with their own experience of God and his grace, and they took up its many meanings. They wished that others too might receive and rejoice in all the grace they themselves had gained. These four became devas, and stood as guru-lords to others.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    மந்திரம் பெற்ற ஏழு பேர்களில் முதல் நால்வராகிய இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன் ஆகியோர், திசைக்கு ஒருவராய் நான்கு திசைகளுக்கும் நாதர்களாக இருந்தனர்.

    The first four among the seven who received the mantras, Indiran, Soman, Piraman and Rudran, each stood as guru over one of the four directions.

  • வரி 2

    குருவிடம் பெற்ற மந்திரத்துடன் அவர்களின் இறையனுபவமும் இறைவனின் அருளும் சேர்ந்து பல்வேறு பொருள்களை அவர்கள் கைக்கொண்டனர்.

    The mantra received from their guru joined with their own experience of God and his grace, and they took up its many meanings.

  • வரி 3

    தாங்கள் பெற்ற அருளையெல்லாம் மற்றவர்களும் பெற்று இன்புற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.

    They wished that others too might receive and rejoice in all the grace they themselves had gained.

  • வரி 4

    அவர்கள் நால்வரும் தேவர்களாகவும், மற்றவர்களுக்குக் குருநாதர்களாகவும் ஆனார்கள்.

    These four became devas, and stood as guru-lords to others.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

உரை · meaning

எம்மிடம் சீடர்களாக இருந்த ஏழு பேர்களுக்கும், எம்முள் இருந்து எம்மூலமாக மந்திரங்களை வழங்கியது இறைவனே. அவன் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமையை உடையவன். சூரியனின் ஒளி தோன்றுவதற்கு முன்பிருந்தே எப்போதும் மாபெரும் ஒளியாக இருப்பவன் அவன். அவனுடைய பெருமைகளை அவன் அருளின்றி யாரிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியாது. ஆகவே நாம் இறைவன் அருள் பெற்ற குருநாதர்களின் மூலம் இறைவனின் தன்மைகளையும் அவனை அடையும் வழிகளையும் தெரிந்துகொண்டு, அவன் அருள் பெற்று அவனை அடையலாம்.

It was God himself, dwelling within me, who gave the mantras to all seven of my disciples through me. He carries the greatness of being without birth and without death. He is the one who was a vast light even before the sun's own light ever appeared, and remains so always. No one can come to know his greatness except through his own grace. And so we too can come to know God's own nature and the ways of reaching him through the guru-lords who have received his grace, and, gaining his grace ourselves, reach him.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    எம்மிடம் சீடர்களாக இருந்த ஏழு பேர்களுக்கும், எம்முள் இருந்து எம்மூலமாக மந்திரங்களை வழங்கியது இறைவனே.

    It was God himself, dwelling within me, who gave the mantras to all seven of my disciples through me.

  • வரி 2

    அவன் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமையை உடையவன்.

    He carries the greatness of being without birth and without death.

  • வரி 3

    சூரியனின் ஒளி தோன்றுவதற்கு முன்பிருந்தே எப்போதும் மாபெரும் ஒளியாக இருப்பவன் அவன்.

    He is the one who was a vast light even before the sun's own light ever appeared, and remains so always.

  • வரி 4

    அவனுடைய பெருமைகளை அவன் அருளின்றி யாரிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியாது; ஆகவே நாம் அருள் பெற்ற குருநாதர்களின் மூலமே அவனை அடையலாம்.

    No one can come to know his greatness except through his own grace; and so we too can reach him only through the guru-lords who have received it.

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடேஅழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

உரை · meaning

ஏழு கடல்களும் பொங்கியெழுந்து, ஏழு மேகங்களும் மும்மாரி மழையைப் பொழிந்து, எட்டுத் திசைகளும் நீரால் நிரம்பினாலும், 'பிறப்புக்கு உயர்வைத் தரும் நல் அறங்களைச் செய்துகொண்டே இருங்கள்' என்று அனைவரையும் பாதுகாத்து அருளுபவன் இறைவன். சிவப்பான பவளம் போன்ற மேனியும், குளிர்கொண்ட மேகம் போன்ற விரிந்த சடையும் உடையவன் அவன். தன் திருவடியைப் பணிந்து தொழுத நான்கு சனகாதி முனிவர்களுக்கும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) அவன் அருளினான்.

Even if the seven seas rise up and swell, the seven clouds pour down their triple rain, and all eight directions fill with water, God still says, "Continue to perform the good deeds that raise up your birth," and so protects and blesses everyone. His form glows red as coral, and his spread matted locks are cool as a cloud. He gave his grace to the four sages beginning with Sanaka, Sanakar, Sanandhanar, Sanathanar and Sanatkumarar, who bowed and worshipped at his holy feet.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஏழு கடல்களும் பொங்கியெழுந்து, ஏழு மேகங்களும் மும்மாரி மழையைப் பொழிந்து, எட்டுத் திசைகளும் நீரால் நிரம்பினாலும்,

    Even if the seven seas rise up and swell, the seven clouds pour down their triple rain, and all eight directions fill with water,

  • வரி 2

    'பிறப்புக்கு உயர்வைத் தரும் நல் அறங்களைச் செய்துகொண்டே இருங்கள்' என்று அனைவரையும் பாதுகாத்து அருளுபவன் இறைவன்.

    God still says, "Continue to perform the good deeds that raise up your birth," and so protects and blesses everyone.

  • வரி 3

    சிவப்பான பவளம் போன்ற மேனியும், குளிர்கொண்ட மேகம் போன்ற விரிந்த சடையும் உடையவன் அவன்.

    His form glows red as coral, and his spread matted locks are cool as a cloud.

  • வரி 4

    தன் திருவடியைப் பணிந்து தொழுத நான்கு சனகாதி முனிவர்களுக்கும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) அவன் அருளினான்.

    He gave his grace to the four sages beginning with Sanaka, Sanakar, Sanandhanar, Sanathanar and Sanatkumarar, who bowed and worshipped at his holy feet.

திருமந்திரம் பாடல் #67

1 / 6

0:000:00
குரு பாரம்பரியம்பாடல் 67

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com