தொடர்ந்து படிக்கread this section continuously
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.
உரை · meaning
எம்மிடம் சீடர்களாக இருந்த ஏழு பேர்களுக்கும், எம்முள் இருந்து எம்மூலமாக மந்திரங்களை வழங்கியது இறைவனே. அவன் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமையை உடையவன். சூரியனின் ஒளி தோன்றுவதற்கு முன்பிருந்தே எப்போதும் மாபெரும் ஒளியாக இருப்பவன் அவன். அவனுடைய பெருமைகளை அவன் அருளின்றி யாரிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியாது. ஆகவே நாம் இறைவன் அருள் பெற்ற குருநாதர்களின் மூலம் இறைவனின் தன்மைகளையும் அவனை அடையும் வழிகளையும் தெரிந்துகொண்டு, அவன் அருள் பெற்று அவனை அடையலாம்.
It was God himself, dwelling within me, who gave the mantras to all seven of my disciples through me. He carries the greatness of being without birth and without death. He is the one who was a vast light even before the sun's own light ever appeared, and remains so always. No one can come to know his greatness except through his own grace. And so we too can come to know God's own nature and the ways of reaching him through the guru-lords who have received his grace, and, gaining his grace ourselves, reach him.
வரி வாரியாக · line by line
- வரி 1
எம்மிடம் சீடர்களாக இருந்த ஏழு பேர்களுக்கும், எம்முள் இருந்து எம்மூலமாக மந்திரங்களை வழங்கியது இறைவனே.
It was God himself, dwelling within me, who gave the mantras to all seven of my disciples through me.
- வரி 2
அவன் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமையை உடையவன்.
He carries the greatness of being without birth and without death.
- வரி 3
சூரியனின் ஒளி தோன்றுவதற்கு முன்பிருந்தே எப்போதும் மாபெரும் ஒளியாக இருப்பவன் அவன்.
He is the one who was a vast light even before the sun's own light ever appeared, and remains so always.
- வரி 4
அவனுடைய பெருமைகளை அவன் அருளின்றி யாரிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியாது; ஆகவே நாம் அருள் பெற்ற குருநாதர்களின் மூலமே அவனை அடையலாம்.
No one can come to know his greatness except through his own grace; and so we too can reach him only through the guru-lords who have received it.
திருமந்திரம் பாடல் #71





