திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 72

பாயிரம்குரு பாரம்பரியம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடேஅழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

உரை · meaning

ஏழு கடல்களும் பொங்கியெழுந்து, ஏழு மேகங்களும் மும்மாரி மழையைப் பொழிந்து, எட்டுத் திசைகளும் நீரால் நிரம்பினாலும், 'பிறப்புக்கு உயர்வைத் தரும் நல் அறங்களைச் செய்துகொண்டே இருங்கள்' என்று அனைவரையும் பாதுகாத்து அருளுபவன் இறைவன். சிவப்பான பவளம் போன்ற மேனியும், குளிர்கொண்ட மேகம் போன்ற விரிந்த சடையும் உடையவன் அவன். தன் திருவடியைப் பணிந்து தொழுத நான்கு சனகாதி முனிவர்களுக்கும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) அவன் அருளினான்.

Even if the seven seas rise up and swell, the seven clouds pour down their triple rain, and all eight directions fill with water, God still says, "Continue to perform the good deeds that raise up your birth," and so protects and blesses everyone. His form glows red as coral, and his spread matted locks are cool as a cloud. He gave his grace to the four sages beginning with Sanaka, Sanakar, Sanandhanar, Sanathanar and Sanatkumarar, who bowed and worshipped at his holy feet.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஏழு கடல்களும் பொங்கியெழுந்து, ஏழு மேகங்களும் மும்மாரி மழையைப் பொழிந்து, எட்டுத் திசைகளும் நீரால் நிரம்பினாலும்,

    Even if the seven seas rise up and swell, the seven clouds pour down their triple rain, and all eight directions fill with water,

  • வரி 2

    'பிறப்புக்கு உயர்வைத் தரும் நல் அறங்களைச் செய்துகொண்டே இருங்கள்' என்று அனைவரையும் பாதுகாத்து அருளுபவன் இறைவன்.

    God still says, "Continue to perform the good deeds that raise up your birth," and so protects and blesses everyone.

  • வரி 3

    சிவப்பான பவளம் போன்ற மேனியும், குளிர்கொண்ட மேகம் போன்ற விரிந்த சடையும் உடையவன் அவன்.

    His form glows red as coral, and his spread matted locks are cool as a cloud.

  • வரி 4

    தன் திருவடியைப் பணிந்து தொழுத நான்கு சனகாதி முனிவர்களுக்கும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) அவன் அருளினான்.

    He gave his grace to the four sages beginning with Sanaka, Sanakar, Sanandhanar, Sanathanar and Sanatkumarar, who bowed and worshipped at his holy feet.

திருமந்திரம் பாடல் #72

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com