இருபத மாவது இரவும் பகலும்உருவது ஆவது உயிரும் உடலும்அருளது ஆவது அறமும் தவமும்பொருவது உள்நின்ற போகமது ஆமே.
காண்டற் கரியன் கருத்தில னந்தியுந்தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாதந் தோன்றிடும்வேண்டிக் கிடந்து விளக்கொளி யாய்நேசமீண்டிக் கிடந்தங்கு இருளறு மாறே.
குறிப்பினி னுள்ளே குவலையந் தோன்றும்வெறுப்பிரு ணீக்கில் விகிர்தனு நிற்குஞ்செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடிலறிப்புறு காட்சி யமரரு மாமே.
தேர்ந்தறி யாமையின் காலங்கள் போயினபேர்ந்தறி வானெங்கள் பிஞ்ஞக னெம்மிறையார்ந்தறி வாரறி வேதுணை யாமெனச்சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.
தானே யறியும் வினைக ளறிந்தபின்நானே யறுதியென் னந்தி யறியுங்கோனூனே யுருக்கி யுணர்வை யுணர்ந்தபின்தேனே யனைய நந்திதேவர் பிரானே.
நானறிந் தன்றே யிருக்கின்ற வீசனைவானறிந் தாரறி யாது மயங்கினரூனறிந் துள்ளே யுயிர்க்கின்ற வொண்சுடர்தானறி யானை பின்னையாரறி வாரே.
அருளெங் குமான வளவை யறியாரருளை நுகரா ரமுத முகந்தோரருளைங் கருமத் ததிசூக்க முன்னாரருளெங் குங்கண்ணான தாரறி வாரே.
அறிவி லணுக வறிவது நல்கிப்பொறிவழி யாசை புகுத்திப் புணர்த்தியறிவது வாக்கி லருளது நல்குஞ்செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.
அருளில் பிறந்திட் டருளில் வளர்ந்திட்டருளிலிழிந் திளைப் பாற்றி மறைந்திட்டருளான வானந்தத் தாரமு தூட்டியருளா லென்னந்தி யகம்புகுந் தானே.
அருளா லமுதப் பெருங்கட லாட்டியருளா லடிபுனைந் தாரமுந் தந்திட்டருளான வானந்தத் தாரமு தூட்டியருளா லென்னந்தி யகம்புகுந் தானே.
பாசத்தி லிட்ட தருள்தந்த பாசத்தில்நேசத்தை விட்ட தருள்தந்த நேசத்திற்கூசற்ற முத்தி யருள்தந்த கூட்டத்தில்நேசமற்றுந் தோன்றா நிலையரு ளாமே.
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்மருவா வருள்தந்த மாநந்தி யார்க்குமறவாழி யந்தண னாதிப் பராபரனுறவாகி வந்தெனுளம் புகுந் தானே.
அகம்புகுந் தானடி யேற்கரு ளாலேயகம்புகுந் துந்தெரி யானரு ளில்லோர்க்ககம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாயகம்புகுந் தானந்தி யானந்தி யாமே.
ஆயு மறிவோ டறியாத மாமாயையாய கரணம் படைக்கு மைம்பூதமுமாய பலவிந் திரிய மவற்றுடனாய வருடைந்து மாயருட் செய்கையே.
அருளே சகமு மாய பவுதிகமருளே சராசர மாய மலமேயிருளே வெளியே யெனும்மெங்கு மீசனருளே சகளத் தவனன்றி யாமே.
சிவமோடு சத்தி திகழ்நாத விந்துத்தவமான வைமுக னீச னரனும்பவமுறு மால் பதுமத்தோ னிறுதிநவமவை யாகி நடிப்பவன் றானே.
அருட்கண்ணில் லாதார்க் கரும்பொருள் தோன்றாவருட்கண்ணுள் ளோர்க்கெதிர் தோன்று மரனேயிருட்கண்ணி னோர்க்கிங் கிரவியுந் தோன்றாத்தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.
தானே படைத்திடுந் தானே யளித்திடுந்தானே துடைத்திடுந் தானே மறைத்திடுந்தானே யிவைசெய்து தான்முத்தி தந்திடுந்தானே வியாபித்த தலைவனு மாமே.
தலையான மேனான்குந் தான் குருவாகுமலையா வருவுரு வாகுஞ் சதாசிவம்நிலையான கீனான்கும் நீடுரு வாகுந்துலையா விவைமுற்று மாயல்ல தொன்றே.
ஒன்றது வாலே யுலப்பிலி தானாகிநின்றது தாம்போ லுயிர்க்குயி ராய்நிலைதுன்றி யவையல்ல வாகுந் துணையெனநின்றது தான்விளை யாட்டென்னு நேயமே.
நேயத்தே நின்றிடும் நின்மல சத்தியோடாயக் குடிலையுள் நாத மடைந்திட்டுப்போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டுவீயத் தகாவிந்து வாகிவிளை யுமே.
விளையும் பரவிந்து தானே வியாபிவிளையுந் தனிமாயை மிக்க மாமாயைகிளையொன்று தேவர் கிளர்மனு வேதமளவொன் றிலாவண்டமாங் கொடி யாளே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1792
1 / 22




