திருமூலர் அருளிய திருமந்திரம்
8. தியானம்

மூன்றாம் தந்திரம் பாடல் 598–617 (20 பாடல்கள்)

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்பொருவாத புந்தி புலன்போக மேவல்உருவாய சத்தி பரத்தியான முன்னுங்குருவார் சிவத்தியானம் யோகக் கூறே.

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டுஅண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்புண்ணாக்கி நம்மையும் பிழைப்பித்த வாறே.

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்பண்ணாமல் நின்றதுவும் பார்க்கலு மாமே.

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரைஒருபொழு துன்னார் உயிருட் சிவனைஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையைஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கிஅனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்டமனத்து விளக்கது மாயா விளக்கே.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லைஉண்ணாடியில் உள்ளே ஒளிபெற நோக்கில்கண்ணாடியில் போலக் கலந்துநின் றானே.

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லைதேட்டமும் இல்லை சிவனுமவ னாமே.

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்பயனிது காயம் பயமில்லை தானே

மணிகடல் யானை வளர்குழல் மேகம்அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

கடலொடு மேகங் களிறொடும் ஓசைஅடவெழும் வீணையும் அண்டரண் டத்துச்சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசைதிடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்ஓசை யதன்மணம் போல விடுவதோர்ஓசையாம் ஈசனை உணரவல் லார்க்கே.

நாத முடிவிலே நல்லாள் இருப்பதுநாத முடிவிலே யோகம் இருப்பதுநாத முடிவிலே நாட்டம் இருப்பதுநாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கிஅதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

பள்ளி அறையிற் பகலே இருளில்லைகொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிதுவெள்ளி அறையில் விடிவில்லை தானே.

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்குமண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டுஅவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளேமுளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

முக்குண மூடற வாயுவை மூலத்தேசிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்தக்க வலமிடம் நாழிகை சாதிக்கவைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலேமடலித்த வாணிக் கிருவிரல் உள்ளேகடலித் திருந்து கருதவல் லார்கள்சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

அறிவாயசத் தென்னு மாறா றகன்றுசெறிவான மாயை சிதைத்தரு ளாலேபிறியாத பேரரு ளாயிடும் பெற்றிநெறியான அன்பர் நிலையறிந் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #598

1 / 20

0:000:00
8. தியானம்பாடல் 598

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com