திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2572–2621

எட்டாம் தந்திரம் பாடல் 2572–2621 (50 பாடல்கள்)

துரியம் அடங்கிய சொல்லறும் பாழைஅரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்அருநிலம் என்பதை யாரறி வாரே.

தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்நம்பிய முத்துரி யத்துமே னாடவேயும்பத மும்பத மாகும் உயிர்பரன்செம்பொரு ளான சிவமென லாமே.

வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்துய்த்த பிரணவ மாமுப தேசத்தைமெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்வைத்த படியே யடைந்து நின்றானே.

நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்திமனவா சகங்கெட்ட மன்னனை நாடே.

பூரணி யாது புறம்பொன்றி லாமையின்பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே.

நீயது வானா யெனநின்ற பேருரைஆயது நானானேன் என்னச் சமைந்தறச்சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்ஆயது வாயனந் தானந்தி யாகுமே.

உயிர்பர மாக உயர்பர சீவன்அரிய சிவமாக அச்சிவ வேதத்துஇரியிலுஞ் சீராம் பராபரன் என்னஉரிய உரையற்ற வோமய மாமே.

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்தாய்நாடி யாதிவாக் காதி சகலாதிசேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே.

அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்பிறிவறி யாது பிரானென்று பேணுங்குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

அறிவார் அறிவன அப்பும் அனலும்அறிவார் அறிவன அப்புங் கலப்பும்அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்அறிவான் அறிந்த அறிவறி யோமே.

அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்திஅதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மாமதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்பதியிற் பதியும் பரவுயிர் தானே.

அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே.

நின்மல மேனி நிமலன் பிறப்பிலிஎன்னுளம் வந்திவன் என்னடி யானென்றுபொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்நின்மல மாகென்று நீக்கவல் லானே.

துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டுபறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தேமறந்தறி யாவென்னை வான்வர் கோனும்இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்தவ்வாய அந்தக் கரணம் அகில்மும்எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே.

அழிகின்ற சாயா புருடனைப் போலக்கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்படருஞ் சிவசத்தி தாமே பரமாம்உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே.

செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்அவியின் றியமன மாதிகள் ஐந்துங்குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்துதவிர்வொன் றிலாத சராசரந் தானே.

பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

அளந்து துரியத் தறிவினை வாங்கிஉளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்விளங்கிய வெட்ட வெளியனு மாமே.

இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்பரம்பர மான பரமது விட்டேஉரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கிஇருந்தஎன் நந்தி இதயத்து ளானே.

கரியுண் விளவின் கனிபோல் உயிரும்உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்திரிய விழுங்குஞ் சிவபெரு மானே.

அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தேநந்தி யிருந்தனன் நாமறி யோமே.

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடைஅற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே.

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டுஎல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லைஎல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்எல்லாம் அறிந்த இறையென லாமே.

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்துமுலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்துகலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே.

தானே யுலகில் தலைவ னெனத்தகும்தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே.

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்இருளற்ற சிந்தை இறைவனை நாடிமருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே.

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னைபொய்கலந் தார்முன் புகுதா ஒருவனைஉய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனைகைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.

எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்திபொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

கைகலந் தானை கருத்தினுள் நந்தியைமெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லைபொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம்கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே.

உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடுஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே.

வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டுதம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டாதம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே.

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.

மனமது தானே நினையவல் லாருக்குக்கினமெனக் கூறு மிருங்காய மேவற்றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள்நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்சென்னியின் வைத்த சிவனரு ளாலே.

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னாமனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.

வாசியு மூசியும் பேசி வகையினால்பேசி இருந்து பிதற்றிப் பயனில்லைஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்ஈசன் இருந்த இடம் எளிதாமே.

மாடத்து ளானலன் மண்டபத் தானலன்கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்ஆசை விடவிட ஆனந்த மாமே.

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனேபடுவழி செய்கின்ற பற்றற வீசிவிடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.

உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போனதுவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே.

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும்பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே.

அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்பவனிவன் பல்வகை யாமிப் பிறவிபுவனிவன் போவது பொய்கண்ட போதே.

கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

எட்டாம் தந்திரம்பாடல் 2572

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com