இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்அமைய வகுத்தவ னாதி புராணன்சமையங்க ளாறுந்தன் றாளிணை நாடவமையங் கழல்நின்ற வாதிப் பிரானே.
ஒன்றது பேரூர் வழியா றதற்குளவென்றது போல விருமுச் சமையமுநன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்குன்று குரைத்தெழு நாயையொத் தாரே.
சைவப் பெருமைத் தனிநாயகன் றன்னையுய்ய வுயிர்க்கின்ற வொண்சுடர் நந்தியைமெய்யப் பெருமையர்க் கன்பனை யின்பஞ்செய்வையத் தலைவனை வந்தடைந்துய் மினே.
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்பவனவன் வைத்த பழவழி நாடியிவனவ னென்ப தறியவல் லார்கட்கவனவ னங்குள னாங்கட னாமே.
ஆமா றுரைக்கு மறுசமை யாதிக்குப்போமாறு தானில்லைப் புண்ணிய மல்லதங்காமார் வழியாக்கு மவ்வே றுயிர்கட்கும்போமா றவ்வாதார பூங்கொடி யாளே.
அரனெறி யாவ தறிந்தேனு நானுஞ்சிவநெறி தேடித் திரிந்த வன்னாளுமுரைநெறி யுள்ளக் கடல் கடந்தேறுந்தரநெறி யாய தனிச்சுடர் தானே.
தேர்ந்தவர் தன்னை யடைந்த சிவநெறிபேர்ந்தவ ருன்னிப் பெயர்ந்த பெருவழியார்ந்தவ ரண்டத்து புக்க வருநெறிபோந்து பிணைந்து புணர்நெறி யாமே.
ஈரு மனத்தை யிரண்டற வீசுமினூருஞ் சகாரத்தை யோதுமி னோதியைவாரு மரனெறி மன்னிய முன்னியத்தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.
மினக்குறி யாளனை வேதியர் வேதத்தினக்குறி யாளனை ஆதிப் பிரானைநினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்நயக்குறி காணிலர னெறியா குமே.
ஆய்ந்துணர் வார்களான சாத்திரம் பலவாய்ந்துணரா வகை நின்ற வரனெறியாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழுதேய்ந்துணரச் செய்வ தோரின்பமு மாமே.
சைவச் சமையத் தனிநாயக னந்தியுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டுதெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்ததுவையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே.
இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தியெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெனொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே.
ஆமே பிரான்முக மைந்தொடு மாருயிராமே பிரானுக் கதோமுக மானதாமாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்நாமே பிரானுக்கு நரரியல் பாமே.
ஆதிப் பிரானுல கேழு மளந்தவனோதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்பேதிப் பிலாமையி னின்றபரா சத்தியாதிகட் டெய்வமு மந்தமு மாமே.
ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதரராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறியாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழவாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே.
அறிய வொண்ணாத வுடம்பின் பயனையறிய வொண்ணாத வறுவகை யாக்கியறிய வொண்ணாத வறுவகைக் கோசத்தறிய வொண்ணாத தோரண்டம் பதித்தே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1557
1 / 16




