திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2422–2471

எட்டாம் தந்திரம் பாடல் 2422–2471 (50 பாடல்கள்)

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்றுமோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமேஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

பாசம் பயிலுயிர் தானே பரமுதல்பாசம் பயிலுயிர் தானே பசுவென்பபாசம் பயிலப் பதிபர மாதலால்பாசம் பயிலப் பதிபசு வாகுமே.

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனிஅத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.

காலும் தலையும் அறியார் கலதிகள்கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்கால்அந்த ஞானத்கைக் காட்டவீ டாகுமே.

தலைஅடி யாவது அறியார் காயத்தில்தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்தலைஅடி யான அறிவை அறிந்தோர்தலைஅடி யாகவே தான்இருந் தாரே.

நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுறவன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்திதன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே.

சிந்தையின் உள்ளே எந்தை திருவடிசிந்தையின் எந்தை திருவடிக் கீழதுஎந்தையும் என்னை அறியகி லான்ஆகில்எந்தையை யானும் அறியகி லேனே.

பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்சொன்னான்கழலினை சூடிநின் றேனே.

பதியது தோற்றும் பதமது வைம்மின்மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்தரித்து நின்றான் அமராபதி நாதன்கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தைபரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுளதன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்குஇன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.

கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டறமால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான்மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே.

பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.

மூன்றுள குற்றம் முழுதும் நலிவனமான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தனமூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்துஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணிஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தரஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன்ஆகின்ற பராபர மாகும் பிறப்பறஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறுபேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டுவேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்தகணுஒன் றிலாத சிவமும் கலந்தால்இணையறு பால்தேன் அமுதென இன்பத்துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்செம்பர மாகிய வாசி செலுத்திடத்தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே.

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்இந்தியும் சத்தாதி விடவிய னாகும்நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்துநந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

பரதுரி யத்து நனவு படியுண்டவிரிவிற் கனவும் இதன்உப சாந்தத்துதுரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்அரிய துரியம் அசிபதம் ஆமே.

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்மூன்று படிமண் டலத்து முதல்வனைஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடிநான்று நலம்செய் நலந்தரு மாறே.

மன்று நிறைந்தது மாபர மாயதுநின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்கன்று நினைந்தெழு தாயென வந்தபின்குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்கூறா உபதேசம் கூறில் சிவபரம்வேறாய் வெளிப்பட்ட வேதப் பசுவனார்பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே.

பற்றறப் பற்றில் பரம்பதி யாவதுபற்றறப் பற்றில் பரனறி வேபரம்பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கேபற்றறப் பற்றில் பரம்பர மாமே.

பரம்பர மான பதிபாசம் பற்றாப்பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்பரம்பர மான பரசிவா னந்தம்பரம்பர மாகப் படைப்பது அறிவே.

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்றுதனியுற்ற கேவலம் தன்னில் தானாகிநினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்தனையுற்று இடத்தானே தற்பர மாமே.

தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்தற்பரன் கால பரமும் கலந்தற்றநற்பரா தீதமும் நாடுஅக ராதியே.

அதீதத்து ளாகி அகன்றவன் நந்திஅதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மாமதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்பதியிற் பதியும் பரவுயிர் தானே.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதிசோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பரபோதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

துரியங் கடங்கு துரியா தீதத்தேஅரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தேதுரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

வைச்ச கலாதி வருதத்து வங்கெடவெச்ச இருமாயை வேறாக வேரறுத்துஉச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவேஅச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே.

என்னை அறிய இசைவித்த என்நந்திஎன்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்தன்னை அளித்தான் தற்பர மாகவே.

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயுநிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்அரந்த அறநெறி யாயது வாகித்தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

சத்தின் நிலையினில் தானான சத்தியும்தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்பாலிய விந்து பரையுள் பரையாகக்கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்துசீலமி லாஅணுச் செய்திய தாமே.

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளிசிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்குஅப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.

பண்டை மறைகள் பரவான் உடலென்னும்துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கேமிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே.

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்றதனியா இயதற் பரங்காண் அவன்தான்வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்றவெளியாய சத்தி அவன்வடி வாமே.

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

நனவாதி மூன்றினில் சீவ துரியம்தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்ஆனாப் பரபதம் அற்றது அருநனாவானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.

அணுவின் துரியத்து நான்கும துஆகிப்பணியும் பரதுரி யம்பயில் நான்கும்தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக்கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே.

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்நேர்அந்த மாகநெறிவழி யேசென்றுபார்அந்த மான பராபத்து அயிக்கியத்துஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

தொட்டே இருமின் துரிய நிலத்தினைஎட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.

அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்றுசெறிவாய மாயை சிதைத்துஅரு ளாலேபிறியாத பேரருள் ஆயிடும் பெற்றிநெறியான அன்பர் நிலையறிந் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

எட்டாம் தந்திரம்பாடல் 2422

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com