தொழு தறிவாளர் சுருதி கண்ணாகப்பழு தறியாத பரம குருவைவழி யறிவார் நல்வழி யறிவாளரழி வறிவார் மற்றையல்லா தவரே.
பதைத் தொழிந்தேன் பரமாவுன்னை நாடியதைத் தெழுந்தேற் றினியாரோடுங் கூடேன்சிதைத் தடியேன் வினை சிந்தனைதீரவுதைத் துடையா யுகந்தாண்டரு ளாயே.
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தைவிதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச்சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தியிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே.
கொள்ளினு நல்ல குருவினைக் கொள்ளுகவுள்ள பொருளுட லாவி யுடனீய்கஎள்ளத் தனையு மிடைவிடா தேநின்றுதெள்ளி யறியச் சிவபதந் தானே.
சோதி விசாகந் தொடர்ந்திருந் தேள்நண்டுவோதிய நாளே யுணர்வது தானென்றுநீதியு ணீர்மை நினைந்தவர்க் கல்லதுவாதியு மேது மறியகி லானே.
தொழிலார மாமணி தூயான சிந்தையெழிலா ரிறைவ னிடங்கொண்ட போதவழலார் விறகாம் வினையது போகக்கழலார் திருவடி கண்டரு ளாமே.
சாத்திக னாய்ப்பல தத்துவந் தானுன்னியாத்திக வேதநெறி தோற்ற மாகியேயார்த்த பிறவியி னஞ்சி யறனெறிசாத்தவல் லானவனே சற்சீட னாமே.
சத்து மசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப்பத்தியில் ஞானம் பெறப்பணிந் தானந்தச்சத்தியி லிச்சை தருவோன்சற் சீடனே.
அடிவைத் தருளுதி யாசானின் றென்னாய்வடிவைத்த மாமுடி மாயாப் பிறவியடிவைத்த காய வருட்சத்தி யாலேயடிபெற்ற ஞானத்த னாசற்று ளானே.
சீராரு ஞானத்தி னிச்சை செலச்செலவாராத காதல் குருபரன் பாலாகச்சாராத சாதக நான்குந்தன் பாலுற்றாராராயு ஞானத்த னாமடிவைக் கவே.
உணர்த்து மதிபக்கு வற்கே உணர்த்தியிணக்கில் பராபரத் தெல்லை யுன்னிட்டுக்குணக்கோடு தெற்குத் தரபச்சி மங்கொண்டுணர்த்து மின்னாவுடை யான்றன்னை யுன்னியே.
இறையடி தாழ்ந்தை வணக்கமு மெய்திக்குறையது கூறிக் குணங்கொண்டு போற்றிச்சிறையுடன் னீயறக் காட்டிச் சிவத்தோடறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச் சித்தாந்தத்துவேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமேதாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.
சற்குணம் வாய்மை தயாவிவேகந் தண்மைசற்குரு பாதமே சாயைபோ னீங்காமேசிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்அற்புதமே தோன்ற லாகுஞ்சற் சீடனே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1690
1 / 14




