நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்கோலின் மேல்நின்ற குறிகள் பதினாறுமூலங் கண்டாங்கே முடிந்த முதலிரண்டுங்காலங் கண்டானடி காணலு மாமே.
ஈராறு நாதத்தி லீரெட்டா மந்தத்தில்மேதாதி நாதாந்த மீதாம் பாராசத்திபோதா லயாந்த விகாரந் தனிற்போதமேதாரி வாதார மீதானமுண் மையே.
மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால்தானென்று நானென்றுந் தன்மைக ளோராறுபாரெங்கு மாகிப் பரந்த பராபரங்காரொன்று கற்பக மாகிநின் றானே.
ஆதார சோதனை யானாடி சுத்திகள்வேதாதி யீரெண் கலந்தது விண்ணொளிபோதா லையத்துப் புலன்கரணப் புந்திசாதா ரணங்கெட்றான சகமார் கமே.
மேதாதி யாலே விடாதோமெனத் தூண்டியாதார சோதனை யத்துவ சோதனைதாதார மாகவே தானெழச் சாதித்தாலாதாரஞ் செய்ப்போக மாவது காயமே.
ஆறந்த முங்கூடி யாகுமுடம் பினிற்கூறிய வாதார மாறுங்குறிக் கொண்மினாறிய வக்கரமா மைம்பதின் மேலேயூறிய வாதாரத் தோரெழுத் தாமே.
ஆகு முடம்பு மழிக்கின்ற வவ்வுடல்போகு முடம்பும் பொருந்திய வாறுதானாகிய வக்கர மைம்பது தத்துவமாகு முடம்புக்கு மாறந்த மாமே.
ஆயு மலரி னணிமலர் மேலதுமாய விதழும் பதினாறு மங்குளதூய வறிவு சிவானந்த மாகிப்போய்மேய வறிவாய் விளைந்தது தானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1704
1 / 8




