ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.
ஆரிய னல்லன் குதிரை இரண்டுளவீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லைகூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லைபிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்ஆறுதல் கும்பகம் அறுபத்து நான்கில்ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமு மாமே.
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்தெளியக் குருவின் திருவருள் பெற்றால்வளியினும் வேட்டு வளியனு மாமே.
எங்கே இருக்கினும் பூரி இடத்திலேஅங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லைஅங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்சங்கே குறிக்கவும் தலைவனு மாமே.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லைகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்கூற்றை யுதைக்குங் குறியுமது வாமே.
மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்பாலாம் இரேசகத் தானுட் பதிவித்துமாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவேஆலாலம் உண்டானின் அருள்பெற லாமே.
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தேஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.
இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்புட்டிப் படத்தச நாடியும் பூரித்துகொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்துநட்டம் இருக்க நமனில்லை தானே.
புறப்பட்டுப் புக்குத் திரியும் வாயுவைநெறிப்படவே உள்ளே நின்மல மாக்கில்உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்கூடிக் கொளிறில்கோல அஞ்செழுத் தாமே.
பன்னிரண் டானைக்குப் பகல்இர வுள்ளதுபன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #564
1 / 14




