திருமூலர் அருளிய திருமந்திரம்
9. சன் மார்க்கம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1477–1487 (11 பாடல்கள்)

சாற்றுஞ் சன்மார்கமாந் தற்சிவ தத்துவந்தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டுசீற்ற மொழிந்து சிவயோக சித்தராய்க்கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தியுய்ய வகுத்த குருநெறி யொன்றுண்டுதெய்வச் சிவநெறி சன்மார்கஞ் சேர்ந்துய்யவையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்குருபத்தி செய்யுங் குவலையத் தோர்க்குத்தருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்கந் தானே.

தெளிவறி யாதார் சிவனை யறியார்தெளிவறி யாதார் சீவனு மாகார்தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்தெளிவறி யாதவர் தீராப் பிறப்பே.

தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்றுமோனம தாமொழிப் பான்முத்த ராவதுமீனமில் ஞானா னுபூதியி லின்பமுந்தானவ னாயறற லானசன் மார்கமே.

சன்மார்கத் தார்க்கு முகத்தோடு பீடமுஞ்சன்மார்கத் தார்க்கு மிடத்தோடு தெய்வமுஞ்சன்மார்கத் தார்க்கும் வருக்கந் தெரிசனமெய்மார்கத் தார்க்கு மியம்புவன் கேண்மினே.

சன்மார்கச் சாதனந் தான்ஞான ஞேயமாம்பின்மார்கச் சாதனம் பேதையர்க் காய்நிற்குந்துன்மார்கம் விட்ட துரியத் துரிசற்றார்சன்மார்கந் தானவ னாகுஞ்சன் மார்கமே.

சன்மார்க மேத்த வரும்பெருஞ் சீடர்க்கும்பின்மார்க மூன்றும் பிறவியற் பாமென்றால்நன்மார்கந் தான்சிவ னோடுற நாடலேசொன்மார்கஞ் சொல்லச் சுருதிகைக் கொள்ளுமே.

அன்னிய பாசமு மாகுங் கருமமுமுன்னு மவத்தையு மூலப் பகுதியும்பின்னிய பாசமும் பேதாதி பேதமுந்தன்னோடுங் கண்டவர் சன்மார்கத் தோரே.

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்தோரசிபாத வுண்மைச் சொரூபோ தையத்துற்றசைவான தில்லாமை யானசன் மார்கமே.

மார்கஞ்சன் மார்கிகட் கட்ட வகுப்பதுமார்கஞ்சன் மார்கமே யன்றிமற் றொன்றில்லைமார்கஞ்சன் மார்க மெனுநெறிவை காதோர்மார்கஞ்சன் மார்க மதிசித்த யோகமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1477

1 / 11

0:000:00
9. சன் மார்க்கம்பாடல் 1477

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com