சன்மார்கந் தானே சகமார்க மானதுமன்மார்க மாமுத்தி சித்திக்கும் வைப்பதாம்பின்மார்க மாவது பேராப் பிறந்திறந்துன்மார்க ஞானத் துறுதியு மாமே.
மருவுந் துவாதெச மார்கமு மில்லார்குருவுஞ் சிவனுஞ் சமையமுங் கூடார்வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகுமுருவுங் கிளையு மொருங்கிழப் போரே.
யோகமு மாதியி னுள்ளே யகலிடம்யோக சமாதியி னுள்ளே யுளரொளியோக சமாதியி னுள்ளே யுளசத்தியோக சமாதி யுகந்தவர் சித்தரே.
யோகமும் போகமும் யோகியர் காகுமாம்யோக சிவரூப முற்றிடு முள்ளத்தோர்யோகம் புவியிற் புருடாதி சித்தியாமாக மிரண்டு மழியாத யோகிக்கே.
ஆதார சோதனை யானாடி சுத்திகள்மேதாதி யீரெண் கலந்தது விண்ணொளிபோதா லயத்துப் புலன்கர ணம்புந்திசாதா ரணங்கெட லாஞ்சக மார்கமே.
பிணங்கி நிற்கின்றவை யெந்தையும் பின்னையணங்கி யெறிவ னயிர்மன வாளாற்கணம்பதி னெட்டுங் கருது மொருவன்வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்வளங்கனி யொப்பதோர் வாய்மை யினாகுமுளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1488
1 / 7




