ஞானத்தின் மிக்க வறிநெறி நாட்டில்லைஞானத்தின் மிக்க சமையமு நன்றன்றுஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவால்ஞானத்தின் மிக்கார் நரரில்மிக் காரே.
சத்தமுஞ் சத்த மன்னுந் தகுமனதுமுய்த்த வுணர்வு முணர்ந்துங் கரந்தையுஞ்சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்கமே.
தன்பா லுலகுந் தனக்கரு ளாவதுமன்பா லெனக் கருளாவது மாவனென்பார்கள் ஞானமு மெய்துஞ் சிவயோகமுமன்பாலி னேயமும் பெற்றிடுந் தானே.
இருக்குஞ் சேயிடம் பிரமமு மாகும்வருக்குஞ் சராசர மாகு முலகந்தருக்கிய வாசார மெல்லாந் தகுமேதிருக்கமில் ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்கே.
அறிவு மடக்கமு மன்பி னுடனேபிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்குறியுங் குணமுங் குரைகழல் நீங்காநெறியறி வார்க்கிது நீர்த்தோணி யாமே.
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுளேனம் விளைந்தெதி ரேகான் வழிதோறுங்கூனல் மதிமண் டலத்தினில் நீர்தண்டுமூனம றுத்துநின் றொண்சுட ராமே.
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாமோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்துமேனிற்ற லாஞ்சத்தி வித்து விளைந்திடுந்தானிக் குலத்தோர் சரிதை கிரிகையே.
ஞானத்தின் ஞானாதி நான்குமாம் ஞானிக்குஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்ஞானத்தில் யோகமே நாதாந்தம் நல்லொளிஞானக் கிரிகையே நன்முத்தி நாடலே.
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோர்கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோர்திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.
ஞான சமையமே நாடுந்தனைக் காண்டல்ஞான விசேடமே நாடும் பரோதையம்ஞான நிர்வாணமே நன்னெறி வன்னருள்ஞானா பிடேகமே நற்குரு பாதமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1467
1 / 10




