நெறிவழி யேசென்று நேர்மையி லொன்றித்தறியிருந் தாப்போலத் தம்மை யிருத்திச்சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்குறியறி வாளர்குக் கூடலு மாமே.
ஊழி தோறூழி யுணர்ந்தவர்க் கல்லதுயூழி தோறூழி யுணரவுந் தானொட்டாராழி யமரு மரியய னென்றுளோரூழி முயன்று மோருச்சியுள் ளானே.
பூவினிற் கெந்தம் பொருந்திய வாறுபோற்சீவனுக் குள்ளே சிவமணம் பூத்ததுவோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்குநாவி யணைந்த நடுத்தறி யாமே.
உய்ந்தன மென்றீ ருறுபொருட் காண்கிலீர்கந்த மலரிற் கரக்கின்ற நந்தியைச்சிந்தை யுறவே தெளிந்திரு ணீக்கினால்முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.
எழுத்தோடு பாடலு மெண்ணெண் கலையும்பழித்தலைப் பாசப் பிறவியு நீங்கார்வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்வழித்தலை செய்யும் வகையுணர்ந் தேனே.
விரும்பிநின் றேசெய்யில் மெய்த்த வராகும்விரும்பிநின் றேசெய்யில் மெய்யுணர் வாகும்விரும்பிநின் றேசெய்யில் மெய்த்த வமாகும்விரும்பிநின் றேசெய்யில் விண்ணவ னாகுமே.
பேணிப் பிறவா வுலகருள் செய்திடுங்காணிற் றனது கலவியு ளேநிற்குநாணில் நரக நெறிக்கே வழிசெய்யுமூனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.
ஒத்தசெங் கோலா ருலப்பிலி மாதவரெத்தனை யாயிரம் வீழ்ந்ததென் றெண்ணிலீர்சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாயத்த னிவனென்றே யன்புறு வார்களே.
யோகிக்கும் யோகாதி மூன்றுள தொன்றுற்றோராகத் தகுகிரி யாதி சரிதாதியாகத்தை விட்ட சரிதை யொன்றொன்றுளவாகித்தன் பத்தியு ளன்புவைத் தேனே.
யோகச் சமையமே யோகம் பலவுன்னல்யோக விசேடமே யட்டாங்க யோகமாம்யோக நிர்வாணமே யுற்ற பரோதையம்யோக பிடேகமே யொண்சத்தி யுற்றலே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1457
1 / 10




