திருமூலர் அருளிய திருமந்திரம்
6. கிரியை

ஐந்தாம் தந்திரம் பாடல் 1451–1456 (6 பாடல்கள்)

பத்துத் திசைக்கும் பரமொரு தெய்வமுண்டேத்துக் கிலரில்லை யெனபத மலர்க்கொத்துத் திருவடி நீழல் சரணெனத்தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்வானுற மாமல ரிட்டு வணங்கினுமூனினை நீக்கி யுணர்பவர்க் கல்லதுதேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

கோனக்கன் றாயே குரைகழ லேத்துமின்ஞானக்கன் றாயே நடுவே யுமிழ்தரும்வானக்கன் றாகிய வானவர் கைதொழுமானைக்கன் றீசனருள் பள்ள மாமே.

இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாமதுபணி செய்கின்ற வாளது கூறினிதுபணி மானிடர் செய்பணி யீசன்பதிபணி செய்வது பத்திமை காணே.

பத்தன் கிரிகை சரிதை பவில்வுற்றுச்சுத்த வருளாற் றுரிசற்ற யோகத்திலுய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.

அன்பி னுருகுவ னாளும் பணிசெய்வன்செம்பொன் செய்மேனிக் கமலத் திருவடிமுன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருளென்பினுட் சோதியி லிங்கு நின்றானே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1451

1 / 6

0:000:00
6. கிரியைபாடல் 1451

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com