அளவில் இளமையும் அந்தமும் ஈறும்அளவியல் காலமும் நாலும் உணரில்தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்அளவில் பெருமை அறியயற் காமே.
உரை · meaning
தன் இளமை அளவற்றது என்று கருதுவது இளமையின் தன்மை; அதன் முடிவாகத் தோன்றுவது முதுமை; அதற்குப்பின் வரும் வாழ்க்கையின் முடிவே இறப்பு. பிறப்புக்கு முன்பே வரையறுக்கப்பட்டு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை; இந்த நான்கும் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று உணர்ந்துகொள்ளவேண்டும். அப்போது, அம்மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் அதை எடுத்துச் சொன்னால், அச்சொல் ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கும்.
Believing one's youth is without limit is the nature of youth; what arises at its end is old age; what comes after, as the end of life, is death. What runs its fixed course between birth and death, set even before birth, is the nature of time; one must realise that all four of these are created by maya. Then one comes to realise the nature of Sankaran, who unfailingly cuts through that very maya; and if the devotees of Shiva who have realised this speak of it, that speech carries a greatness beyond even what Hari, Thirumal, or Ayan, Brahma, can reach.
வரி வாரியாக · line by line
- வரி 1
தன் இளமை அளவற்றது என்று கருதுவது இளமையின் தன்மை; அதன் முடிவாகத் தோன்றுவது முதுமை; அதற்குப்பின் வரும் வாழ்க்கையின் முடிவே இறப்பு.
Believing one's youth is without limit is the nature of youth; what arises at its end is old age; what comes after, as the end of life, is death.
- வரி 2
பிறப்புக்கு முன்பே வரையறுக்கப்பட்டு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை; இந்த நான்கும் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்.
What runs its fixed course between birth and death, set even before birth, is the nature of time; one must realise that all four of these are created by maya.
- வரி 3
அப்போது, அம்மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் அதை எடுத்துச் சொன்னால்,
Then one comes to realise the nature of Sankaran, who unfailingly cuts through that very maya; and if the devotees of Shiva who have realised this speak of it,
- வரி 4
அச்சொல் ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கும்.
that speech carries a greatness beyond even what Hari, Thirumal, or Ayan, Brahma, can reach.




