திருமூலர் அருளிய திருமந்திரம்
திரு மும்மூர்த்திகளின் முறைமை

பாயிரம் பாடல் 103–112 (10 பாடல்கள்)

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்அளவியல் காலமும் நாலும் உணரில்தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்அளவில் பெருமை அறியயற் காமே.

உரை · meaning

தன் இளமை அளவற்றது என்று கருதுவது இளமையின் தன்மை; அதன் முடிவாகத் தோன்றுவது முதுமை; அதற்குப்பின் வரும் வாழ்க்கையின் முடிவே இறப்பு. பிறப்புக்கு முன்பே வரையறுக்கப்பட்டு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை; இந்த நான்கும் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று உணர்ந்துகொள்ளவேண்டும். அப்போது, அம்மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் அதை எடுத்துச் சொன்னால், அச்சொல் ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கும்.

Believing one's youth is without limit is the nature of youth; what arises at its end is old age; what comes after, as the end of life, is death. What runs its fixed course between birth and death, set even before birth, is the nature of time; one must realise that all four of these are created by maya. Then one comes to realise the nature of Sankaran, who unfailingly cuts through that very maya; and if the devotees of Shiva who have realised this speak of it, that speech carries a greatness beyond even what Hari, Thirumal, or Ayan, Brahma, can reach.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    தன் இளமை அளவற்றது என்று கருதுவது இளமையின் தன்மை; அதன் முடிவாகத் தோன்றுவது முதுமை; அதற்குப்பின் வரும் வாழ்க்கையின் முடிவே இறப்பு.

    Believing one's youth is without limit is the nature of youth; what arises at its end is old age; what comes after, as the end of life, is death.

  • வரி 2

    பிறப்புக்கு முன்பே வரையறுக்கப்பட்டு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை; இந்த நான்கும் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்.

    What runs its fixed course between birth and death, set even before birth, is the nature of time; one must realise that all four of these are created by maya.

  • வரி 3

    அப்போது, அம்மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் அதை எடுத்துச் சொன்னால்,

    Then one comes to realise the nature of Sankaran, who unfailingly cuts through that very maya; and if the devotees of Shiva who have realised this speak of it,

  • வரி 4

    அச்சொல் ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கும்.

    that speech carries a greatness beyond even what Hari, Thirumal, or Ayan, Brahma, can reach.

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்ஆதிக் கமலத் தலர்மிசை யானும்சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

உரை · meaning

ஆதியிலிருந்து அனைத்திற்கும் ஆரம்பமாக இருக்கின்ற உருத்திரனும், அணிகின்ற மணிகளைப் போன்ற நீல நிறம் படைத்த திருமாலும், படைப்புத் தந்தையாக தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய இவர்கள் மூவரும் யார் என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களில் தனிப்பட்டு நின்றாலும், அவர்களுக்குள் இருந்து இயக்கும் சிவத்தின் தொடர்ச்சியில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை உணரலாம். இதை அறியாமல் அவர்களின் தொழில்களை வைத்து வேறு வேறாகப் பிரித்து, யார் பெரியவர் யார் சிறியவர் என்று தேவையில்லாத குழப்பத்தில் உலகத்தவர்கள் தமக்குள் சண்டையிட்டு துன்பப்படுகின்றார்கள்.

Rudra, the origin of all things from the beginning, and Thirumal, whose colour is blue like a fine gem, and Brahma, the father of creation seated upon the lotus flower, if one examines who these three truly are, one may realise that although each stands separately in the work assigned to him, they remain one within the unbroken continuity of the Shiva who acts within all of them. Not knowing this, and dividing them apart by their separate works, the people of this world suffer, quarrelling among themselves in the needless confusion of who is greater and who is lesser.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஆதியிலிருந்து அனைத்திற்கும் ஆரம்பமாக இருக்கின்ற உருத்திரனும், அணிகின்ற மணிகளைப் போன்ற நீல நிறம் படைத்த திருமாலும்,

    Rudra, the origin of all things from the beginning, and Thirumal, whose colour is blue like a fine gem,

  • வரி 2

    படைப்புத் தந்தையாக தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய இவர்கள் மூவரும் யார் என்று ஆராய்ந்து பார்த்தால்,

    and Brahma, the father of creation seated upon the lotus flower, if one examines who these three truly are,

  • வரி 3

    அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களில் தனிப்பட்டு நின்றாலும், அவர்களுக்குள் இருந்து இயக்கும் சிவத்தின் தொடர்ச்சியில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை உணரலாம்.

    one may realise that although each stands separately in the work assigned to him, they remain one within the unbroken continuity of the Shiva who acts within all of them.

  • வரி 4

    இதை அறியாமல் அவர்களின் தொழில்களை வைத்து வேறு வேறாகப் பிரித்து, யார் பெரியவர் யார் சிறியவர் என்று தேவையில்லாத குழப்பத்தில் உலகத்தவர்கள் தமக்குள் சண்டையிட்டு துன்பப்படுகின்றார்கள்.

    Not knowing this, and dividing them apart by their separate works, the people of this world suffer, quarrelling among themselves in the needless confusion of who is greater and who is lesser.

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்பீசம் உலகில் பெருந்தெய்வ மானதுஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்தூசு பிடித்தவர் தூரறிந்த் தார்களே.

உரை · meaning

இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான். அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது. இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள், மும்மலங்களின் மாசு படிந்திருப்பதால் அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.

God is present as both good deeds and bad deeds together. Beyond even that, the pranava mantra, Om, which opens the way to knowing him, is itself the greatest deity in this world. Those who, not knowing any of this, wander about imagining that God is this or that in various forms, remain, because the impurity of the three malams still clings to them, without ever removing it and coming to know God, the true reality.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான்.

    God is present as both good deeds and bad deeds together.

  • வரி 2

    அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது.

    Beyond even that, the pranava mantra, Om, which opens the way to knowing him, is itself the greatest deity in this world.

  • வரி 3

    இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள்,

    Those who, not knowing any of this, wander about imagining that God is this or that in various forms,

  • வரி 4

    மும்மலங்களின் மாசு படிந்திருப்பதால், அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.

    remain, because the impurity of the three malams still clings to them, without ever removing it and coming to know God, the true reality.

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்தஅவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

உரை · meaning

சிவபெருமானே அனைத்தின் முதல்வனாய், படைத்தலில் பிரம்மன், காத்தலில் திருமால், அழித்தலில் உருத்திரன் என மூவராகவும், அருளலில் மகேசுவரன், மறைத்தலில் சதாசிவன் என்று சேர்ந்து ஐந்து பேராகவும் நின்று, சக்திமயங்கள் அனைத்திலும் ஒன்றோடொன்று கலந்திருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் மூலமாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியே, ஒளியும் ஒலியுமாய் (விந்துவும் நாதமும்) ஓங்கி நிற்கிறார். பரவெளியில் அனைத்திற்கும் முதலாகிய சங்கரன் எனும் பெயரில் அவரே ஒருவராக இருக்கிறார்.

Sivaperuman himself, as the origin of all things, stands as the three, Brahma in creation, Thirumal in preservation, and Rudra in destruction, and, together with them, as Mahesvara in bestowing grace and Sadasivan in concealment, making five, remaining mingled, one within another, in all the power-filled centres. That very Sadasivamurthy, the supreme reality who is the root of all of these, rises as light and as sound, bindu and nada. And within that vast expanse, he stands as the one, under the name Sankaran, the origin of everything.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    சிவபெருமானே அனைத்தின் முதல்வனாய், படைத்தலில் பிரம்மன், காத்தலில் திருமால், அழித்தலில் உருத்திரன் என மூவராகவும்,

    Sivaperuman himself, as the origin of all things, stands as the three, Brahma in creation, Thirumal in preservation, and Rudra in destruction,

  • வரி 2

    அருளலில் மகேசுவரன், மறைத்தலில் சதாசிவன் என்று சேர்ந்து ஐந்து பேராகவும் நின்று, சக்திமயங்கள் அனைத்திலும் ஒன்றோடொன்று கலந்திருக்கிறார்.

    and, together with them, as Mahesvara in bestowing grace and Sadasivan in concealment, making five, remaining mingled, one within another, in all the power-filled centres.

  • வரி 3

    இவர்கள் அனைவருக்கும் மூலமாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியே, ஒளியும் ஒலியுமாய் (விந்துவும் நாதமும்) ஓங்கி நிற்கிறார்.

    That very Sadasivamurthy, the supreme reality who is the root of all of these, rises as light and as sound, bindu and nada.

  • வரி 4

    பரவெளியில் அனைத்திற்கும் முதலாகிய சங்கரன் எனும் பெயரில் அவரே ஒருவராக இருக்கிறார்.

    And within that vast expanse, he stands as the one, under the name Sankaran, the origin of everything.

பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில்அயனொடு மால்நமக் கன்னியம் இல்லைநயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்வயனம் பெறுவீர் அவ்வானவ ராலே.

உரை · meaning

இறைவனை அடையவேண்டும் என்பதையே பிறவிப்பயனாக அறிந்துகொண்டு, அதற்கான வழிகள் என்னவென்று யோசிக்கும் அளவில், எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் ஒன்றே; இவர்களுக்குத் திருமாலும் பிரம்மனும் அன்னியர்கள் இல்லை. முக்கண் முதல்வனாகிய குருநாதன் சிவபெருமானுக்குச் சொந்தமே அவர்கள். ஆகையால் உண்மையான பயனை அடையவேண்டும் என்று எண்ணி எந்த வானவர்களை வணங்கினாலும், அதற்கான பயனைச் சதாசிவமூர்த்தியே அந்த வானவர்களாக இருந்து அருளுவார்.

For those who know that the very purpose of birth is to reach God, and who, on that basis, think about what the ways of reaching him might be, it makes no difference which deity they worship, it is all the same; to them, Thirumal and Brahma are not strangers. They belong to the three-eyed first Lord, Sivaperuman himself, our own guru. And so, whichever of the celestial beings one worships with the wish to gain the true fruit, it is Sadasivamurthy himself who, in the very form of that celestial being, grants that fruit in his grace.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனை அடையவேண்டும் என்பதையே பிறவிப்பயனாக அறிந்துகொண்டு, அதற்கான வழிகள் என்னவென்று யோசிக்கும் அளவில்,

    For those who know that the very purpose of birth is to reach God, and who, on that basis, think about what the ways of reaching him might be,

  • வரி 2

    எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் ஒன்றே; இவர்களுக்குத் திருமாலும் பிரம்மனும் அன்னியர்கள் இல்லை.

    it makes no difference which deity they worship, it is all the same; to them, Thirumal and Brahma are not strangers.

  • வரி 3

    முக்கண் முதல்வனாகிய குருநாதன் சிவபெருமானுக்குச் சொந்தமே அவர்கள்.

    They belong to the three-eyed first Lord, Sivaperuman himself, our own guru.

  • வரி 4

    ஆகையால் உண்மையான பயனை அடையவேண்டும் என்று எண்ணி எந்த வானவர்களை வணங்கினாலும், அதற்கான பயனைச் சதாசிவமூர்த்தியே அந்த வானவர்களாக இருந்து அருளுவார்.

    And so, whichever of the celestial beings one worships with the wish to gain the true fruit, it is Sadasivamurthy himself who, in the very form of that celestial being, grants that fruit in his grace.

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழமாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

உரை · meaning

இறைவனின் திருக்கோலத்தை அடியவர்களும் இறப்பில்லாத தேவர்களும் சூழ்ந்து நிற்க, பால் போன்ற வெண்ணீறு அணிந்த அவனின் திருவுடலைப் பணிந்து அடியவனாகிய யான் தொழுது நின்றேன். 'காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலுக்கும், படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும் நீ சரிசமமானவன்' என்று இறைவன் எமக்குக் கூறினான். 'ஆகையால் உலகத்திற்குச் சென்று எமது திருவடியின் திருவருளை அனைவருக்கும் வழங்கிடுக' என்று அருளினான்.

பிரம்மனும் திருமாலும் ஒரு சமயத்தில் ஆன்மாக்களாக இருந்து செய்த மாதவங்களாலேயே இறைவனிடமிருந்து படைக்கும் தொழிலையும் காக்கும் தொழிலையும் பெரும் பேறாகப் பெற்றார்கள். எனவே, மாதவம் செய்த இறைவனின் அடியவர்கள் அவர்களுக்குச் சரிசமமானவர்களே. அதனால், உலகில் இறைவனின் திருவடியைப் போற்றி அதன் பயனை மற்றவர்களுக்கும் அருளும் மாதவம் செய்த சிவனடியார்கள் அனைவருமே பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சரிசமமானவர்கள்.

While countless devotees and the undying gods stood surrounding God's own sacred form, and I, his servant, stood bowing and worshipping his sacred body adorned with ash white as milk, God told me, "You are the equal of Thirumal, who performs the work of preservation, and of Brahma, who performs the work of creation." "Go therefore into the world," he said in grace, "and grant everyone the grace of our own holy feet."

It was purely through the great penance they performed while they themselves were once souls that Brahma and Thirumal came to receive from God, as a great blessing, the work of creation and the work of preservation. And so, devotees of God who have performed the same great penance are the equals of these two. Therefore, all Shiva devotees who have performed such great penance, who honour God's holy feet in this world and grant its fruit to others too, are the equals of both Brahma and Thirumal.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனின் திருக்கோலத்தை அடியவர்களும் இறப்பில்லாத தேவர்களும் சூழ்ந்து நிற்க,

    While countless devotees and the undying gods stood surrounding God's own sacred form,

  • வரி 2

    பால் போன்ற வெண்ணீறு அணிந்த அவனின் திருவுடலைப் பணிந்து அடியவனாகிய யான் தொழுது நின்றேன்.

    I, his servant, stood bowing and worshipping his sacred body adorned with ash white as milk.

  • வரி 3

    காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலுக்கும், படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும் நீ சரிசமமானவன் என்று இறைவன் எமக்குக் கூறினான்.

    God told me, "You are the equal of Thirumal, who performs the work of preservation, and of Brahma, who performs the work of creation."

  • வரி 4

    ஆகையால் உலகத்திற்குச் சென்று எமது திருவடியின் திருவருளை அனைவருக்கும் வழங்கிடுக என்று அருளினான்.

    "Go therefore into the world," he said in grace, "and grant everyone the grace of our own holy feet."

வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லதுதானமர்ந் தோரும் தனித்தெய்வம் மற்றில்லைஊனமர்ந் தோரை உணர்வது தானே.

உரை · meaning

தேவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் ஆன்மாக்கள் இருப்பது, தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடியிருக்கும் சிவபெருமானின் திருவருளினால் அன்றி வேறில்லை. அச்சிவபெருமானின் அருள் இல்லாமல் தானாகவே இருந்தவர்கள் என்றும், தனியொரு தெய்வம் என்றும் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இறைவனே உயிர்களின் உடலுக்குள்ளும் இருக்கின்றான் என்பதை உணர்வதுதான் பிறவியின் உண்மையான பயனாகும்.

That souls exist as gods on one hand and as humans on the other is due to nothing but the grace of Sivaperuman, who wears the garland of honey-filled konrai flowers. Apart from that grace of Sivaperuman, there is no such thing as a being who exists entirely on their own, and no such thing as a separate deity either. Realising that this very God is present within the bodies of living beings themselves is the true fruit of being born at all.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    தேவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் ஆன்மாக்கள் இருப்பது,

    That souls exist as gods on one hand and as humans on the other,

  • வரி 2

    தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடியிருக்கும் சிவபெருமானின் திருவருளினால் அன்றி வேறில்லை.

    is due to nothing but the grace of Sivaperuman, who wears the garland of honey-filled konrai flowers.

  • வரி 3

    அச்சிவபெருமானின் அருள் இல்லாமல் தானாகவே இருந்தவர்கள் என்றும், தனியொரு தெய்வம் என்றும் வேறு எதுவும் இல்லை.

    Apart from that grace of Sivaperuman, there is no such thing as a being who exists entirely on their own, and no such thing as a separate deity either.

  • வரி 4

    அப்படிப்பட்ட இறைவனே உயிர்களின் உடலுக்குள்ளும் இருக்கின்றான் என்பதை உணர்வதுதான் பிறவியின் உண்மையான பயனாகும்.

    Realising that this very God is present within the bodies of living beings themselves is the true fruit of being born at all.

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்றஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்றுபேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

உரை · meaning

ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பான சிவமே, படைத்தலில் பிரம்மன், காத்தலில் திருமால், அழித்தலில் உருத்திரன் என மூவராகவும் நிற்கிறது. அருளலில் மகேசுவரன், மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் நின்று செய்யும் இத்தொழில்கள் அனைத்தும், ஆதியிலிருந்தே இருக்கும் பரம்பொருளான அச்சிவமே செய்வது என்பதை மூடர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தொழிலை வைத்து ஈசன், நெடுமால், அயன் என்று அவர்களை வேறு வேறு தெய்வங்களாகக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று வீணாகச் சண்டையிட்டுக்கொண்டு புலம்புகின்றார்கள்.

It is Shivam, the very mass of great light that shines, that stands as the three, Brahma in creation, Thirumal in preservation, and Rudra in destruction. Together with them, as the five, Mahesvara in bestowing grace and Sadasivan in concealment, this same Shivam, the supreme reality existing from the very beginning, carries out all these works, though fools do not know this. They take these figures, on the basis of the work each performs, calling them Isan, tall Mal, Ayan, to be separate deities, and quarrel uselessly among themselves, and lament, over who among them is greater and who is lesser.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பான சிவமே, படைத்தலில் பிரம்மன், காத்தலில் திருமால், அழித்தலில் உருத்திரன் என மூவராகவும் நிற்கிறது.

    It is Shivam, the very mass of great light that shines, that stands as the three, Brahma in creation, Thirumal in preservation, and Rudra in destruction.

  • வரி 2

    அருளலில் மகேசுவரன், மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் நின்று செய்யும் இத்தொழில்கள் அனைத்தும், ஆதியிலிருந்தே இருக்கும் பரம்பொருளான அச்சிவமே செய்வது என்பதை மூடர்கள் அறியாதிருக்கிறார்கள்.

    Together with them, as the five, Mahesvara in bestowing grace and Sadasivan in concealment, this same Shivam, the supreme reality existing from the very beginning, carries out all these works, though fools do not know this.

  • வரி 3

    அவர்கள் செய்யும் தொழிலை வைத்து ஈசன், நெடுமால், அயன் என்று அவர்களை வேறு வேறு தெய்வங்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.

    They take these figures, on the basis of the work each performs, calling them Isan, tall Mal, Ayan, to be separate deities.

  • வரி 4

    அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று வீணாகச் சண்டையிட்டுக்கொண்டு புலம்புகின்றார்கள்.

    and quarrel uselessly among themselves, and lament, over who among them is greater and who is lesser.

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகிவரத்தினுள் மாயவ னாய்அயன் ஆகித்தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

உரை · meaning

பரம்பொருள் என்பதில் ஒன்றானவனாகவும், உயிர்களுக்குள்ளும் வெளியிலும் இருப்பவனாகவும் இருப்பவன் அவனே. ஆன்மா மாதவம் செய்து பெற்ற வரத்தினால் திருமாலாகவும் பிரம்மனாகவும் ஆகிறான். தவம் செய்த தகுதிக்கேற்ப வெவ்வேறு விதமான தரங்களில் பலவித தன்மைகள் கொண்ட தெய்வங்களாகவும் ஆகிறான். செய்கின்ற தொழில்களில் பலவிதமாக நின்று அருளுகின்றவன் சதாசிவமூர்த்தியாகிய ஒருவனே.

He is one as the supreme reality, present both within beings and outside them. By the boon a soul earns through great penance, he becomes Thirumal or Brahma. According to the merit of that penance, he becomes deities of various different orders and natures. He, standing in grace in many forms across the works he performs, is Sadasivamurthy, one alone.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    பரம்பொருள் என்பதில் ஒன்றானவனாகவும், உயிர்களுக்குள்ளும் வெளியிலும் இருப்பவனாகவும் இருப்பவன் அவனே.

    He is one as the supreme reality, present both within beings and outside them.

  • வரி 2

    ஆன்மா மாதவம் செய்து பெற்ற வரத்தினால் திருமாலாகவும் பிரம்மனாகவும் ஆகிறான்.

    By the boon a soul earns through great penance, he becomes Thirumal or Brahma.

  • வரி 3

    தவம் செய்த தகுதிக்கேற்ப வெவ்வேறு விதமான தரங்களில் பலவித தன்மைகள் கொண்ட தெய்வங்களாகவும் ஆகிறான்.

    According to the merit of that penance, he becomes deities of various different orders and natures.

  • வரி 4

    செய்கின்ற தொழில்களில் பலவிதமாக நின்று அருளுகின்றவன் சதாசிவமூர்த்தியாகிய ஒருவனே.

    He, standing in grace in many forms across the works he performs, is Sadasivamurthy, one alone.

தானொரு கூறு சதாசிவன் எம்இறைவானொரு கூறு மருவியும் அங்குளன்கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்றதானொரு கூறு சலமய னாமே.

உரை · meaning

எமது இறைவனாகிய சிவமே ஞானசக்தியை ஒரு பகுதியாகச் சேர்த்து சதாசிவமாக இருக்கின்றான். (சதாசிவம் அசையும் சக்தியாகவும், அசையா சக்தியாகவும் இரு பகுதியாக உள்ளான்.) அவனே வானத்தில் இருக்கும் அனைத்துத் தெய்வங்களின் உருவங்களாகவும் மருவி அங்கு இருக்கின்றான். உலகங்கள் அனைத்திற்கும் தலைவனான அவனே, அவ்வுலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களின் உடலுக்குள்ளும் ஒரு பாகமாக இருந்துகொண்டு, உள்ளிருந்து அந்த உடலை இயக்கும் உயிர்சக்தியாகவும் இருக்கின்றான். இப்படி அனைத்திலும் ஒரு பாகமாக இருக்கும் சிவமே அனைத்தின் தன்மைகளிலும் கலந்து நின்று அனைத்துமாகவும் இருக்கின்றான்.

Shivam, our own God, is Sadasivam, having joined wisdom-power to himself as one part. (Sadasivam exists in two parts, as the moving power and the unmoving power.) He himself dwells in the heavens, mingled there in the very forms of all the deities. He, lord of all the worlds, is present as one part within the bodies of every living being in those worlds, and is also the very life-force that, from within, drives that body. Shivam, present in this way as one part in everything, remains mingled within the nature of all things, and so is himself everything.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    எமது இறைவனாகிய சிவமே ஞானசக்தியை ஒரு பகுதியாகச் சேர்த்து சதாசிவமாக இருக்கின்றான்.

    Shivam, our own God, is Sadasivam, having joined wisdom-power to himself as one part.

  • வரி 2

    அவனே வானத்தில் இருக்கும் அனைத்துத் தெய்வங்களின் உருவங்களாகவும் மருவி அங்கு இருக்கின்றான்.

    He himself dwells in the heavens, mingled there in the very forms of all the deities.

  • வரி 3

    உலகங்கள் அனைத்திற்கும் தலைவனான அவனே, அவ்வுலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களின் உடலுக்குள்ளும் ஒரு பாகமாக இருந்துகொண்டு, உள்ளிருந்து அந்த உடலை இயக்கும் உயிர்சக்தியாகவும் இருக்கின்றான்.

    He, lord of all the worlds, is present as one part within the bodies of every living being in those worlds, and is also the very life-force that, from within, drives that body.

  • வரி 4

    இப்படி அனைத்திலும் ஒரு பாகமாக இருக்கும் சிவமே அனைத்தின் தன்மைகளிலும் கலந்து நின்று அனைத்துமாகவும் இருக்கின்றான்.

    Shivam, present in this way as one part in everything, remains mingled within the nature of all things, and so is himself everything.

திருமந்திரம் பாடல் #103

1 / 10

0:000:00
திரு மும்மூர்த்திகளின் முறைமைபாடல் 103

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com