திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 110

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்றஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்றுபேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

உரை · meaning

ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பான சிவமே, படைத்தலில் பிரம்மன், காத்தலில் திருமால், அழித்தலில் உருத்திரன் என மூவராகவும் நிற்கிறது. அருளலில் மகேசுவரன், மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் நின்று செய்யும் இத்தொழில்கள் அனைத்தும், ஆதியிலிருந்தே இருக்கும் பரம்பொருளான அச்சிவமே செய்வது என்பதை மூடர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தொழிலை வைத்து ஈசன், நெடுமால், அயன் என்று அவர்களை வேறு வேறு தெய்வங்களாகக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று வீணாகச் சண்டையிட்டுக்கொண்டு புலம்புகின்றார்கள்.

It is Shivam, the very mass of great light that shines, that stands as the three, Brahma in creation, Thirumal in preservation, and Rudra in destruction. Together with them, as the five, Mahesvara in bestowing grace and Sadasivan in concealment, this same Shivam, the supreme reality existing from the very beginning, carries out all these works, though fools do not know this. They take these figures, on the basis of the work each performs, calling them Isan, tall Mal, Ayan, to be separate deities, and quarrel uselessly among themselves, and lament, over who among them is greater and who is lesser.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பான சிவமே, படைத்தலில் பிரம்மன், காத்தலில் திருமால், அழித்தலில் உருத்திரன் என மூவராகவும் நிற்கிறது.

    It is Shivam, the very mass of great light that shines, that stands as the three, Brahma in creation, Thirumal in preservation, and Rudra in destruction.

  • வரி 2

    அருளலில் மகேசுவரன், மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் நின்று செய்யும் இத்தொழில்கள் அனைத்தும், ஆதியிலிருந்தே இருக்கும் பரம்பொருளான அச்சிவமே செய்வது என்பதை மூடர்கள் அறியாதிருக்கிறார்கள்.

    Together with them, as the five, Mahesvara in bestowing grace and Sadasivan in concealment, this same Shivam, the supreme reality existing from the very beginning, carries out all these works, though fools do not know this.

  • வரி 3

    அவர்கள் செய்யும் தொழிலை வைத்து ஈசன், நெடுமால், அயன் என்று அவர்களை வேறு வேறு தெய்வங்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.

    They take these figures, on the basis of the work each performs, calling them Isan, tall Mal, Ayan, to be separate deities.

  • வரி 4

    அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று வீணாகச் சண்டையிட்டுக்கொண்டு புலம்புகின்றார்கள்.

    and quarrel uselessly among themselves, and lament, over who among them is greater and who is lesser.

திருமந்திரம் பாடல் #110

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com