திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 109

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லதுதானமர்ந் தோரும் தனித்தெய்வம் மற்றில்லைஊனமர்ந் தோரை உணர்வது தானே.

உரை · meaning

தேவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் ஆன்மாக்கள் இருப்பது, தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடியிருக்கும் சிவபெருமானின் திருவருளினால் அன்றி வேறில்லை. அச்சிவபெருமானின் அருள் இல்லாமல் தானாகவே இருந்தவர்கள் என்றும், தனியொரு தெய்வம் என்றும் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இறைவனே உயிர்களின் உடலுக்குள்ளும் இருக்கின்றான் என்பதை உணர்வதுதான் பிறவியின் உண்மையான பயனாகும்.

That souls exist as gods on one hand and as humans on the other is due to nothing but the grace of Sivaperuman, who wears the garland of honey-filled konrai flowers. Apart from that grace of Sivaperuman, there is no such thing as a being who exists entirely on their own, and no such thing as a separate deity either. Realising that this very God is present within the bodies of living beings themselves is the true fruit of being born at all.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    தேவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் ஆன்மாக்கள் இருப்பது,

    That souls exist as gods on one hand and as humans on the other,

  • வரி 2

    தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடியிருக்கும் சிவபெருமானின் திருவருளினால் அன்றி வேறில்லை.

    is due to nothing but the grace of Sivaperuman, who wears the garland of honey-filled konrai flowers.

  • வரி 3

    அச்சிவபெருமானின் அருள் இல்லாமல் தானாகவே இருந்தவர்கள் என்றும், தனியொரு தெய்வம் என்றும் வேறு எதுவும் இல்லை.

    Apart from that grace of Sivaperuman, there is no such thing as a being who exists entirely on their own, and no such thing as a separate deity either.

  • வரி 4

    அப்படிப்பட்ட இறைவனே உயிர்களின் உடலுக்குள்ளும் இருக்கின்றான் என்பதை உணர்வதுதான் பிறவியின் உண்மையான பயனாகும்.

    Realising that this very God is present within the bodies of living beings themselves is the true fruit of being born at all.

திருமந்திரம் பாடல் #109

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com