தொடர்ந்து படிக்கread this section continuously
ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்பீசம் உலகில் பெருந்தெய்வ மானதுஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்தூசு பிடித்தவர் தூரறிந்த் தார்களே.
உரை · meaning
இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான். அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது. இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள், மும்மலங்களின் மாசு படிந்திருப்பதால் அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.
God is present as both good deeds and bad deeds together. Beyond even that, the pranava mantra, Om, which opens the way to knowing him, is itself the greatest deity in this world. Those who, not knowing any of this, wander about imagining that God is this or that in various forms, remain, because the impurity of the three malams still clings to them, without ever removing it and coming to know God, the true reality.
வரி வாரியாக · line by line
- வரி 1
இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான்.
God is present as both good deeds and bad deeds together.
- வரி 2
அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது.
Beyond even that, the pranava mantra, Om, which opens the way to knowing him, is itself the greatest deity in this world.
- வரி 3
இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள்,
Those who, not knowing any of this, wander about imagining that God is this or that in various forms,
- வரி 4
மும்மலங்களின் மாசு படிந்திருப்பதால், அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.
remain, because the impurity of the three malams still clings to them, without ever removing it and coming to know God, the true reality.
திருமந்திரம் பாடல் #105





