உருவு மருவு மருவோ டுருவுமருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்குக்குருவு மெனநிற்குங் கொள்கைய னாகுந்தருவென நல்குஞ் சதாசிவன் தானே.
நாலான கீழது ருவநடு நிற்கமேலான நான்கு மருவமிகு நாப்பணூலான வொன்று மருவுரு நண்ணலாற்பாலா மிவையாவும் பரசிவன் தானே.
தேவர் பிரானைத் திசைமுக நாதனைநால்வர் பிரானை நடுவுற்ற நந்தியையேவர் பிரானென் றிறைஞ்சுவர் ரவ்வழியாவர் பிரானடி யண்ணலு மாமே.
வேண்டி நின்றேதொழு தேன்வினை போயறவாண்டொரு திங்களும் நாளு மளக்கின்றகாண்டகை யானோடும் கன்னி யுணரினுமூண்டகை மாறினு மொன்றது வாமே.
ஆதிபர தெய்வ மண்டத்து நற்றெய்வஞ்சோதி யடியார் துடரும் பெருந்தெய்வம்நீதியுள் மாதெய்வ நின்மல னெம்மிறைபாதியுள் மன்னும் பராசத்தி யாமே.
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுளேசுத்த சிவபதந் தோயாத தூவெளியத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலாமொத்தயு மாமீசன் றானான துண்மையே.
கொழுந்தினைக் காணிற் குவலையந் தோன்றுமெழுந்தடங் காணி லிருக்கலு மாகும்பரந்தடங் காணிற் பராபதி மேலேதிரண்டெழக் கண்டவர் சிந்தையு ளானே.
எந்தை பரமனு மென்னம்மை கூட்டமுமுந்த வுரைத்து முறைசொல்லில் ஞானமாஞ்சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியையுந்தியின் மேல்வைத்து உகந்திருந் தானே.
சத்தி சிவன் விளையாட்டா முயிராக்கியொத்த விருமாயா கூட்டத் திடைபூட்டிச்சுத்த மதாகுந் துரியம் பிறிவித்துச்சித்த மகிழ்ந்து சிவமகமாக் குமே.
சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணிசத்தி சிவமுமாஞ் சிவஞ் சத்தியாகுஞ்சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைச்சத்தி தானென்றுஞ் சமைந்துரு வாகுமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1763
1 / 7




