அகார முதலா யனைத்துமாய் நிற்குமுகார முதலா யுயிர்ப்பெய்து நிற்குமகார வுகார மிரண்டு மறியிலகார வுகார மிலிங்கம தாமே.
ஆதார மாதெய்வ மாகின்ற விந்துவுமேதாதி நாதமு மீதே விரிந்தனவாதார விந்து வதிபீட நாதமேபோதா விலிங்கப் புணர்ச்சியது ஆமே.
சத்தி சிவமா மிலிங்கமே தாபரஞ்சத்தி சிவமா மிலிங்கமே சங்கமஞ்சத்தி சிவமா மிலிங்கஞ் சதாசிவஞ்சத்தி சிவமா குந்தற்பரந் தானே.
தானே ரெழுகின்ற சோதியைக் காணலாம்பானே ரெழுகின்ற வைம்பதம் வந்திடிற்பூனே ரெழுகின்ற பொற்கொடி தன்னுடன்றானே யெழுந்த வகாரமது ஆமே.
விந்துவு நாதமு மேவு மிலிங்கமாம்விந்து வதேபீடம் நாத மிலிங்கமாமந்த விரண்டையு மாதார தெய்வமாய்வந்த கருவைந்துஞ் செய்யுமவை யைந்தே.
சத்திநற் பீடந் தகுநல்ல வாத்துமாச்சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுஞ்சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவஞ்சத்திநல் லாத்துமாச் சதாசிவந் தானே.
மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்கைமனம்புகுந் தின்பம் பொழிகின்ற போதுநலம்புகுந் தென்னோடு நாதனை நாமேநிலம்புகுந் தாதியுமேல் கொண்ட வாறே.
பராபர னெந்தை பனிமதி சூடித்தராபரன் தன்னடி யார்மனங் கோயில்சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னுமராமரன் மன்னி மனத்துறைந் தானே.
பிரானல்ல னாமெனிற் பேதை உலகர்குரானென்று மென்மனங் கோயில் கொண்டீசனராநின்ற செஞ்சடை யங்கியு நீரும்பொராநின் றவர்செய்யப் புண்ணியன் தானே.
அன்று நின்றான் கிடந்தானவ னென்றுஞ்சென்று நின்றெண்திசை யேத்துவர் தேவர்களென்று நின்றேத்துவ ரெம்பெருமான் தன்னையொன்றி யென்னுள்ளத்தி னுள்ளிருந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1753
1 / 10




