கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்சத்தமும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்சித்தமும் வேண்டாஞ் செயலற் றிருக்கிலே.
விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.
கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதிவாடித் தவஞ்செய்வ தேதமிவை களைந்தூடிற் பலவுல கோரெத்தவ மாமே.
மனத்துறை மாக்கட லேழுங்கை நீங்கித்தவத்திடை யாளர்தஞ் சர்வத்து வந்தார்பவத்திடை யாளரவர் பணி கேட்கில்முகத்திடை நந்தியை முந்தலு மாமே.
மனத்திடை நின்ற மதிவா ளுருவியினத்திடை நீக்கி யிரண்டற வீர்ந்துபுனத்திடை நஞ்சையும் போக மறித்தாற்றவத்திடை யாறொளி தன்னொளி யாமே.
ஒத்து மிகவு நின்றானை யுரைப்பதுபத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழமுத்தி கொடுக்கு முனிவ னெனும்பதஞ்சத்தான செய்வது தான்றவந் தானே.
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக் கென்றெண்ணிமலர்தொட்டுக் கண்டேன் வரும்பலன் காணென்றலைகெட்ட நூல்கண்டு தாழ்ந்தேனென் னுள்ளந்தலைதொட்டுக் கண்டேன் றவங்கண்ட வாறே.
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்கிடரடை யாவண்ண மீச னருளும்விடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கிலுடரடை செய்வ தொருன்மத்த மாமே.
ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்குழக்கன்று துள்ளியக் கோணியைப் புக்காற்குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்ளிழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே.
சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவாற்சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோ ரறவுண்டாற்சித்தஞ் சிவமாகவே சித்தி முத்தியாஞ்சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1634
1 / 11




