பிரானரு ளுண்டெனி லுண்டுநற் செல்வம்பிரானரு ளுண்டெனி லுண்டுநல் ஞானம்பிரானரு ளிற்பெருந் தன்மையு முண்டுபிரானரு ளாற்பெருந் தெய்வமு மாமே.
தமிழ்மண் டலமைந்துந் தவ்விய ஞானமுழவது போல வுலகர் திரிவரவிழு மனமு மெமாதி யறிவுந்தமிழ்மண் டலமைந்துந் தத்துவ மாமே.
புண்ணிய பாவ மிரண்டுள பூமியில்நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகளெண்ணி யிரண்டையும் வேரறுத் தப்புறத்தண்ணலி ருந்திட மாய்ந்து கொள்ளீரே.
முன்னின் றருளு முடிக்கின்ற காலத்துநண்ணின் றுலகில் நடுவுயிராய் நிற்கும்பின்னின் றருளும் பிறவியை நீக்கிடுமுன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.
சிவனரு ளாற்சில தேவரு மாவர்சிவனரு ளாற்சில தெய்வத்தோ டொப்பர்சிவனரு ளால்வினை சேர்கி லாரமைச்சிவனருள் கூறிற் சிவலோக மாமே.
புண்ணிய னெந்தை புனித னிணையடிநண்ணி விளக்கென்ன ஞானம் விளைந்ததுமண்ணவ ராவதும் வானவ ராவதுமண்ண லிறைவனருள் பெற்ற போதே.
காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்டமாயத்தே ரேறி மயங்கு மவையுணர்நேயத்தே ரேறி நிமலனருள் பெற்றாலாயத்தே ரேறி யவனிவ னாமே.
அவ்வுல கத்தே பிறக்கி லுடலோடுமவ்வுல கத்தே யருந்தவம் நாடுவரவ்வுல கத்தே யரனடி கூடுவரவ்வுல கத்தே யருள்பெறு வாரே.
கதிர்கொண்ட காந்தங் கனலின் வடிவாமதிகண்ட காந்த மணிநீர் வடிவாஞ்சதிகொண்டு தாக்கி யெரியின் வடிவாமெரிகொண்ட வீசனெ ழில்வடி வாமே.
நாடு முறவுங் கலந்தெங்க ணந்தியைத்தேடுவன் றேடிச் சிவபெருமா னென்றுகூடுவன் கூடிக் குரைகழற்கே செல்லவீடு மளவும் விடுகின்றி லேனே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1645
1 / 10




