திருமூலர் அருளிய திருமந்திரம்
4. துறவு

ஆறாம் தந்திரம் பாடல் 1614–1623 (10 பாடல்கள்)

இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கறப்பதி காட்டு மமரர் பிரானே.

பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலேமறந்து மலவிரு ணீங்க மறைந்துசிறந்த சிவனருள் சேர் பருவத்துத்துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

அறவன் பிறப்பிலி யாரு மில்லாதானுறைவது காட்டக முண்பது பிச்சைதுறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தானெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயுநெறியில் வழுவா தியங்கவல் லார்க்குநெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே.

கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவருநாடி வளைந்தது நான் கடைவேனலனாடல் விடையுடை யண்ணல் திருவடிகூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே.

உழவனு ழவுழ வானம் வழங்கவுழவனு ழவினிற் பூத்த குவளையுழவனு ழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டுழவன தனையுழ வொழிந் தானே.

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூறுவன்நாள்துறந் தார்க்கவ னண்ப னவாவலிகார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்பார்துறந் தார்க்கே பதஞ்செய்ய லாமே.

நாகமு மொன்று படமைந்தி னாலதுபோகமாழ் புற்றிற் பொருந்தி நிறைந்ததுவாக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்தேக படஞ்செய் துடம்பிட லாமே.

அகன்றார் வழிமுத லாதிப் பிரானுமிவன்றா னெனநின் றெளியனு மல்லன்சிவன்றான் பலபல சீவனு மாகுநயன்றான் வரும்வழி நாமறி யோமே.

தூம்பு துறந்தன வொன்பது வாய்தலுமாம்பற் குழியி லகஞ்சுழிப் பட்டதுவேம்பேறி நோக்கினென் மீகாமன் கூறையிற்கூம்பேறிக் கோயில் பழுக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1614

1 / 10

0:000:00
4. துறவுபாடல் 1614

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com