நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்பாங்கான பாசம் படரா படரினும்ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவேநீங்கா அமுத நிலைபெற லாமே.
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்ஞேயத்தில் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவராயத்தி னின்ற வறிவறி வோரே.
தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந்தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டுதானென் றபூவை யவனடி சாத்தினால்நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
வைச்சன வாறாறு மகற்றியே வைத்துமெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டுநிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தாலச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே.
முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்தென்னை யறிவித் திருந்தன னந்தியே.
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்கோணாத போதமுங் கூடாத கூட்டமுநாணாத நாணமு நாதாந்த போதமுங்காணா யெனவந்து காட்டின னந்தியே.
மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடுமோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்குமோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றியுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தேபெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.
மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்திபாலித்த முத்திரைப் பற்றுப் பரஞானமாலித்த நாட்டமே ஞேயம் பகுத்தற்றமூலச் சொரூபன் மொழிஞா துருவனே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1605
1 / 9




