திருமூலர் அருளிய திருமந்திரம்
11. சாம்பவி மண்டலச் சக்கரம்

நான்காம் தந்திரம் பாடல் 1297–1306 (10 பாடல்கள்)

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்ஆம்பத மெட்டாக விட்டிடின் மேலதாங்காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்கோடற வீதியுங் கொணர்ந்துள் ளிரண்டழிபாடறி பத்துட னாறு நடுவீதிஏடற நாலைந்து இடவகை யாமே.

நாலஞ் சிடவகை யுள்ளதோர் மண்டலம்நாலுநல் வீதியுள் நல்ல விலிங்கமாய்நாலுநற் கோணமும் நன்னா லிலிங்கமாய்நாலுநற் பூநடு வண்ணலவ் வாறே.

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்வேறுரு வாக விளைந்து கிடந்ததுதேறிநீ ரும்மிற் சிவாய நமவென்றுகூறுமின் கூறிற் குறைகளு மில்லையே.

குறைவது மில்லை குரைகழற் கூடுமறைவது மாரண மவ்வெழுத் தாகித்திறமது வாகத் தெளியவல் லார்கட்கிறவில்லை யென்றென் றியம்பினர் காணே.

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்பேணும் பதியும் பெருகிய தீர்த்தமுமூணு முணர்வு முறக்கமுந் தானாயக்காணுங் கனகமுங் காரிகை யாமே.

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்போமே யதுதானும் போம்வழி யேபோகானால்நாமே நினைத்தன செய்யலு மாகும்பார்மே லொருவர் பகையில்லை தானே.

பகையில்லை யென்றும் பணிந்தவர் தம்பால்நகையில்லை நாளும் நன்மைக ளாகும்வினையில்லை யென்றும் விருத்தமு மில்லைத்தகையில்லைத் தானுஞ் சலமது வாமே.

ஆரு முரைசெய்ய லாமஞ் செழுத்தாலேயாரு மறியாத வானந்த ரூபமாம்பாரும் விசும்பும் பகலு மதியதியூனு முயிரு முணர்வது வாமே.

உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளேயணைந்தெழு மாங்கதி யாதிய தாகுங்குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்கணந்தெழுங் காணு மக்காமுகை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1297

1 / 9

0:000:00
11. சாம்பவி மண்டலச் சக்கரம்பாடல் 1297

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com