தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்தாமறி வார்சிவ தத்துவ ராவர்கள்தாமறி வாருக்குத் தமர்பர னாமே.
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலையாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறையாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடியாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னும்கற்றன போதம் கமழ்பவர் மானிடர்உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்பற்றிவந்து உண்ணும் பயனறி யாரே.
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்துஇழிக்கஅன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே.
தன்னை அறியாது தான்நல்லன் என்னாதிங்கின்மை யறியா திளையரென் றோராதுவன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்தன்மையுடன் நல்ல தவஞ்செய்யும் நீரே.
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லைஇறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லைமறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்அறந்தான் அறியும் அளவறி யாரே.
தான்தவம் செய்வதாம் செய்தவத் தவ்வழிமான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்காள்ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்நான்தெய்வ மென்று நமனும்வரு வானே.
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணிஇளைப்பினை நீக்கும் இருவழி உண்டுகிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசைஅற்றம் உரையான் அறநெறிக் கல்லதுஉற்றுங் களால்ஒன்றும் ஈந்தது வேதுணைமற்றுஅண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #251
1 / 9




