கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கேவிழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.
ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்பூண்டு கொண்டாரும் புகுந்தறிவா ரில்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்தூண்டு விளக்கின் சுடருமறி யாரே.
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறைஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியைஓர்ந்துஉற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.
விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்கரும்பொத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தனே.
பாலன் இளையன் விருத்தன் எனநின்றகாலம் கழிவன கண்டும் அறிகிலார்ஞாலம் கடந்தண்டம் ஊடறுத் தானடிமேலும் கிடந்து விரும்புவன் நானே.
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்மாலை படுவதும் வாணாள் கழிவதும்காலுமவ் வீசன் சலவிய னாகிலும்ஏல நினைப்பவருக் கின்பஞ்செய் தானே.
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்பருவூசி பையும் பறக்கின்ற வாறே.
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினைஉண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்விண்ணுறு வாரையும் மண்ணுறு வாரையும்எண்ணுறு முப்பதில் ஈர்ந்துஒழிந் தாரே.
ஒன்றிய ஈரெண் கலையும் உடன்றனநின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே.
எய்திய நாளில் இளமை கழியாமைஎய்திய நாளில் இசையினால் ஏத்துமின்எய்திய நாளில் எறிவ தறியாமல்எய்திய நாளில் இருந்ததுகண் டேனே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #177
1 / 10




