திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 185

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றிய ஈரெண் கலையும் உடன்றனநின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே.

உரை

பௌர்ணமி அன்று முழுவதாகத் தோன்றும் நிலா, பிறகு பதினாறு கலைகளில் சிறிது சிறிதாகத் தேய்ந்து, அமாவாசை அன்று முற்றிலும் மறைந்துவிடும் வழக்கத்தை ஒவ்வொரு மாதமும் காண்பினும், அதன் பொருளை உணராமல் இருக்கின்றனர் மூடர்கள். உயிர்களின் இந்த மூடத்தனத்தால் அவர்கள் செய்யும் பல வினைகளைக் கண்டு கோபம் கொள்ளும் எமதர்மன், அவர்களை மீண்டும் பிறக்கவைக்கும் குழிகளை, அதாவது ஆசைகளை, வைத்தவுடன், அந்தக் குழிகளில் ஆசையால் சென்று விழுகின்றன உயிர்கள். அப்படி ஆசையில் விழுந்தபின், இளமை அழிந்து முதுமை பெற்று இறக்கும் தறுவாயில் எமனைக் கண்டு, ஏன் இப்படி நமக்கு நேர்கிறது என்று திகைப்பு மாறாமல் இருக்கின்றனர் இந்த மூடர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பௌர்ணமி அன்று முழுவதாகத் தோன்றும் நிலா, பிறகு பதினாறு கலைகளில் சிறிது சிறிதாகத் தேய்ந்து, அமாவாசை அன்று முற்றிலும் மறைந்துவிடும் வழக்கத்தை ஒவ்வொரு மாதமும் காண்பினும்,

  • வரி 2

    அதன் பொருளை உணராமல் இருக்கின்றனர் மூடர்கள்.

  • வரி 3

    உயிர்களின் இந்த மூடத்தனத்தால் அவர்கள் செய்யும் பல வினைகளைக் கண்டு கோபம் கொள்ளும் எமதர்மன், அவர்களை மீண்டும் பிறக்கவைக்கும் குழிகளை, அதாவது ஆசைகளை, வைத்தவுடன், அந்தக் குழிகளில் ஆசையால் சென்று விழுகின்றன உயிர்கள்.

  • வரி 4

    அப்படி ஆசையில் விழுந்தபின், இளமை அழிந்து முதுமை பெற்று இறக்கும் தறுவாயில் எமனைக் கண்டு, ஏன் இப்படி நமக்கு நேர்கிறது என்று திகைப்பு மாறாமல் இருக்கின்றனர் இந்த மூடர்கள்.

திருமந்திரம் பாடல் #185

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout