திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 182

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்மாலை படுவதும் வாணாள் கழிவதும்காலுமவ் வீசன் சலவிய னாகிலும்ஏல நினைப்பவருக் கின்பஞ்செய் தானே.

உரை

தினந்தோறும் காலையில் எழுகின்ற உயிர்கள், மாலையில் உறங்கச் செல்லும் வரை பலவித செயல்கள் செய்து தங்கள் வாழ்நாட்களை வீணாகக் கழிக்கின்றனர். அவ்வாறு வீணாக வாழ்க்கை கழிந்தபின் உயிர்களை அழிக்கும் ஈசுவரன் கோபம் கொண்ட உருத்திரனைப் போலத் தெரிந்தாலும், தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப அவனை அன்போடு நினைத்து வாழும் உயிர்களுக்கோ அவனே பேரின்பத்தை வழங்கி அருளுவான்.

தினந்தோறும் பல காரியங்கள் செய்து வெட்டியாக வாழ்க்கையைக் கழித்துவிட்டு, இறக்கும்போது இறைவனைக் கண்டு அவன் கோபத்தோடு அழிப்பவன் என்று பயப்படத் தேவையில்லை; உயிரோடு இருக்கும்போதே இறைவனின் பெருங்கருணையைப் புரிந்துகொண்டு அவனை அன்போடு நினைத்து வழிபட்டு வந்தால், இறக்கும்போதும் அவன் பேரின்பத்தையே அளித்தருள்வான்.

வரி வாரியாக

  • வரி 1

    தினந்தோறும் காலையில் எழுகின்ற உயிர்கள்,

  • வரி 2

    மாலையில் உறங்கச் செல்லும் வரை பலவித செயல்கள் செய்து தங்கள் வாழ்நாட்களை வீணாகக் கழிக்கின்றனர்.

  • வரி 3

    அவ்வாறு வீணாக வாழ்க்கை கழிந்தபின் உயிர்களை அழிக்கும் ஈசுவரன் கோபம் கொண்ட உருத்திரனைப் போலத் தெரிந்தாலும்,

  • வரி 4

    தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப அவனை அன்போடு நினைத்து வாழும் உயிர்களுக்கோ அவனே பேரின்பத்தை வழங்கி அருளுவான்.

திருமந்திரம் பாடல் #182

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout