திருமூலர் அருளிய திருமந்திரம்
வேதச் சிறப்பு

பாயிரம் பாடல் 51–56 (6 பாடல்கள்)

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்றவேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

உரை · meaning

வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை. ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளன. நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும், வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல், இறைவன் வழங்கிய அந்த வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.

There is no other dharma that God has given apart from the Vedas. Every dharma fit to be recited and lived by is found within the Vedas. All the great sages of great knowledge who came before us, without engaging in useless disputes about the why and the wherefore of the Vedas, attained liberation simply by reciting that same Veda which God gave.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை.

    There is no other dharma that God has given apart from the Vedas.

  • வரி 2

    ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளன.

    Every dharma fit to be recited and lived by is found within the Vedas.

  • வரி 3

    நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும், வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல்,

    All the great sages of great knowledge who came before us, without engaging in useless disputes about the why and the wherefore of the Vedas,

  • வரி 4

    இறைவன் வழங்கிய அந்த வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.

    attained liberation simply by reciting that same Veda which God gave.

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்வேதம் உரைத்தானும் வேதம் விளங்கிடவேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

உரை · meaning

வேதங்களை ஓதுபவர்கள் அனைவரும் வேதியர்கள் ஆகிவிட மாட்டார்கள். வேதங்களின் அர்த்தங்களை உணர்ந்து அதன்படி நடப்பவர்களே உண்மையான வேதியர்கள் ஆவார்கள். இறைவன் வேதங்களை வழங்கியது, உயிர்கள் அறங்களைத் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பதற்காகவும், உண்மைப் பொருளான இறைவனை உணர்ந்து, மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்காகவுமே.

Not everyone who recites the Vedas becomes a true Vedic scholar. Only those who grasp the meaning of the Vedas and live by it are true Vedic scholars. God gave the Vedas so that living beings would come to know dharma and live by it, and so that they would understand him as the true reality and finally reach him, the ultimate reality itself.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    வேதங்களை ஓதுபவர்கள் அனைவரும் வேதியர்கள் ஆகிவிட மாட்டார்கள்.

    Not everyone who recites the Vedas becomes a true Vedic scholar.

  • வரி 2

    வேதங்களின் அர்த்தங்களை உணர்ந்து அதன்படி நடப்பவர்களே உண்மையான வேதியர்கள் ஆவார்கள்.

    Only those who grasp the meaning of the Vedas and live by it are true Vedic scholars.

  • வரி 3

    இறைவன் வேதங்களை வழங்கியது, உயிர்கள் அறங்களைத் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பதற்காகவும்,

    God gave the Vedas so that living beings would come to know dharma and live by it,

  • வரி 4

    உண்மைப் பொருளான இறைவனை உணர்ந்து, மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்காகவுமே.

    and so that they would understand him as the true reality and finally reach him, the ultimate reality itself.

இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கிவெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

உரை · meaning

சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவனும், உணர்ந்து வேதத்தைச் சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும், வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும், அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளுபவனும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.

He dwells as the mantra-form within the beautiful, well-worded Vedas. He also dwells as awareness within the hearts of Vedic scholars who understand and recite them. He dwells as the hidden meaning within the very words that the finest Vedic scholars, walking the Vedic path, recite. And he stands as the power that formed everything, granting his grace. This is our own Lord, the three-eyed first one, Sivaperuman himself.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவன் அவன்.

    He dwells as the mantra-form within the beautiful, well-worded Vedas.

  • வரி 2

    உணர்ந்து வேதத்தைச் சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும் அவனே.

    He also dwells as awareness within the hearts of Vedic scholars who understand and recite them.

  • வரி 3

    வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும் அவனே இருக்கிறான்.

    He also dwells as the hidden meaning within the very words that the finest Vedic scholars, walking the Vedic path, recite.

  • வரி 4

    அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.

    This is our own Lord, standing as the power that formed everything and granting his grace, the three-eyed first one, Sivaperuman himself.

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்பெருநெறி யாய பிரானை நினைந்துகுருநெறி யாம்சிவ மாநெறி கூடும்ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

உரை · meaning

இறைவனை அடையும் திருநெறி என்பது சித்தாந்தமும் (அறிந்த கருத்துக்கள்) அசித்தாந்தமும் (அறியாத கருத்துக்கள்) மட்டுமே அல்ல. இறைவனை மனத்தில் எப்போதும் நினைத்து அவனைப் பூஜிக்கும் பெருமைக்குரிய பக்தி வழியும் ஒரு நெறியே. குருவானவர் அருளும் மாபெரும் சிவ வழியில் ஒன்றுகூடும் சன்மார்க்க வழியும் ஒரு நெறியே. இவை அனைத்தும் இறைவனை அடையும் ஒரே வழியே என்பதை வேதாந்தம் ஓதுகின்றது.

The sacred path to reaching God is not only Siddhanta (known truths) and Asiddhanta (unknown truths). The glorious path of bhakti, keeping God always in one's thoughts and worshipping him, is also one such path. The path of Sanmargam, which joins into the great Shiva-path granted by the guru, is also one such path. The Vedanta declares that all of these are, in truth, one and the same single path.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனை அடையும் திருநெறி என்பது சித்தாந்தமும் (அறிந்த கருத்துக்கள்) அசித்தாந்தமும் (அறியாத கருத்துக்கள்) மட்டுமே அல்ல.

    The sacred path to reaching God is not only Siddhanta (known truths) and Asiddhanta (unknown truths).

  • வரி 2

    இறைவனை மனத்தில் எப்போதும் நினைத்து அவனைப் பூஜிக்கும் பெருமைக்குரிய பக்தி வழியும் ஒரு நெறியே.

    The glorious path of bhakti, keeping God always in one's thoughts and worshipping him, is also one such path.

  • வரி 3

    குருவானவர் அருளும் மாபெரும் சிவ வழியில் ஒன்றுகூடும் சன்மார்க்க வழியும் ஒரு நெறியே.

    The path of Sanmargam, which joins into the great Shiva-path granted by the guru, is also one such path.

  • வரி 4

    இவை அனைத்தும் இறைவனை அடையும் ஒரே வழியே என்பதை வேதாந்தம் ஓதுகின்றது.

    The Vedanta declares that all of these are, in truth, one and the same single path.

ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்கூறங்க மாகக் குணம்பயில் வார்இல்லைவேறங்க மாக விளைவுசெய் தப்புறம்பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

உரை · meaning

ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை ஓதி அருளிய இறைவனைத் தன் உடம்பினுள்ளே ஒரு அங்கமாக வைத்து அவனுடைய தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை. அவனைத் தமது உடலிலிருந்து வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணிக்கொண்டு பலவித செயல்களைச் செய்கின்றனர். அப்படிச் செய்து கிடைத்த பயன்களையே உயர்வாகக் கருதி அதையே பெருக்கிக்கொண்டு இறைவனை உணராமலேயே வாழ்கின்றார்கள்.

வேதத்தின் ஆறு அங்கங்கள்: சிட்சை, வேதத்தின் எழுத்தையும் ஒலியையும் பற்றிச் சொல்வது; வியாகரணம், சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது; சந்தம், செய்யுள் இலக்கணத்தைப் பற்றிச் சொல்வது; சோதிடம், கோள் நிலைகளை வைத்துக் காலத்தை ஆராய்வது; நிருக்தம், வேதச் சொற்களுக்குப் பொருள் கூறுவது; கல்பம், வேதத்தின் செயல்முறைகளை உரைப்பது.

There is no one who has come to know the qualities of God, the very one who recited and graciously gave the great Vedas that stand as six limbs, by taking him as one limb within their own body. Instead, people take him as a limb existing outside their own body, and carry out all manner of actions. They think highly of only the results gained this way, and go on increasing just that, living their whole lives without ever coming to know God.

The six limbs of the Vedas: Siksha, which concerns the letters and sounds of the Vedas; Vyakarana, which examines the grammar of words; Chandas, which concerns the metre of verse; Jyotisha, which studies time through the positions of the planets; Nirukta, which gives the meaning of Vedic words; and Kalpa, which sets out the procedures of the Vedas.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை ஓதி அருளியவன் இறைவன். அவ்வாறு அங்கங்கள்-- சிட்சை (எழுத்தும் ஒலியும்), வியாகரணம் (சொல் இலக்கணம்), சந்தம் (செய்யுள் இலக்கணம்), சோதிடம் (கோள் நிலைகளால் காலம் அறிதல்), நிருக்தம் (சொற்பொருள் விளக்கம்), கல்பம் (வேதச் செயல்முறை).

    God is the one who recited and graciously gave the great Vedas that stand as six limbs. Those six limbs -- Siksha (letters and sound), Vyakarana (word grammar), Chandas (verse metre), Jyotisha (studying time through the planets), Nirukta (word meaning) and Kalpa (Vedic procedure).

  • வரி 2

    அவனைத் தம் உடலின் ஒரு அங்கமாக வைத்து, அவனுடைய தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை.

    There is no one who comes to know his qualities by taking him as a limb of their own body.

  • வரி 3

    அவனைத் தமது உடலுக்கு வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணி, பலவித செயல்களைச் செய்கின்றனர்.

    Instead, they think of him as a limb existing outside their own body, and carry out all manner of actions.

  • வரி 4

    அப்படிக் கிடைக்கும் பயன்களையே உயர்வாகக் கருதி, அதையே பெருக்கிக்கொண்டு இறைவனை உணராமல் வாழ்கின்றார்கள்.

    They think highly of only the results gained this way, and go on increasing just that, living without ever coming to know God.

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்ஆட்டும் ஆறாத அவனியில் மாட்டாதார்மேட்டு விருப்பார் விரதம்இல் லாதவர்ஈட்டும் இடம்சென் றிகலலுற் றாரே.

உரை · meaning

இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு ஒலித்துப் பாடி, அதற்கேற்ப பாவமும் காட்டி நடனமாடும் இளம்பெண்கள், அந்தப் பாடல்களின் மூலம் இறைவனை உணர்ந்து முக்தி பெறுவதற்கு முயற்சிக்காமல், தங்களின் நடனங்களின் மூலம் பொருள் பெறவே முயற்சிக்கின்றனர். அப்பெண்களின் நடனத்தைக் கண்டு களிப்பவர்களும் அதன் உண்மைப் பொருளை உணராமல், அவர்களின் நடனத்தைக் கண்டு சிற்றின்பத்திலேயே இருக்கின்றார்கள். உயர்வான வேதங்களை உயிர்கள் உய்யும் பொருட்டு உண்மைப் பொருளுணர்ந்து ஓதவேண்டிய அந்தணர்கள், மோட்சம் அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான ஒழுக்கங்களைக் (விரதங்களைக்) கடைப்பிடிக்காமல், பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இந்தப் பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றார்கள். இவர்களால் செய்யப்படும் யாகங்களைப் பெறுபவர்களும் உண்மைப் பொருள் உணராமல் உலகப் பொருள்களிலேயே மனம் செலுத்துவதால், அப்பெண்களின் நடனத்தைக் காண்பவர்கள் ஆகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் பொருளுக்கு ஆசைப்படும் அந்தணர்களோ, அப்படி பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, தங்களின் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள்.

வேதங்களில் இறைவனை அடையும் வழிகளும், அதைக் கடைப்பிடிக்கும்போது இருக்க வேண்டிய ஒழுக்கங்களும் (விரதங்களும்) கொடுக்கப்பட்டிருந்தாலும், அதைச் சிரத்தையோடு மேற்கொள்ளாமல் வெறும் சிற்றின்பத்தில் சிக்கி உலகப் பொருள்களை நாடி அலையும் உயிர்கள் தங்களின் பிறவிப் பயனை எய்யாமல் இழிந்துபோகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் பேரின்பப் பொருளான இறைவனை வேதங்கள் மூலம் உணர்ந்து முக்தியை அடைவீர்களாக என்று திருமூலர் இங்கு அருளுகின்றார்.

Young women who sing songs about God, set to music, and dance displaying appropriate expressions, do not try, through those very songs, to realise God and attain liberation; instead they try only to gain wealth through their dancing. Those who take pleasure watching these women's dancing also fail to grasp its true meaning, and remain caught in this lesser pleasure merely watching them dance. The brahmins, whose duty is to recite the exalted Vedas with true understanding for the sake of the salvation of living beings, may wish for liberation, but without keeping to the disciplines, the vows, that duty requires, and reciting the Vedas and conducting sacrifices only for the wealth others give them, they become no different from these dancing women. Those who receive the sacrifices performed by such brahmins, likewise failing to grasp the true meaning and setting their minds only on worldly wealth, become like those who merely watch the women's dancing. And the brahmins who covet the wealth these patrons give go wherever such wealth can be found, turning their own exalted birth into a degraded one, and live out their lives in suffering.

Although the Vedas lay out both the ways to reach God and the disciplines, the vows, to be kept while following them, living beings who do not take these up with real devotion, and instead remain caught in mere lesser pleasure, wandering after worldly things, fail to gain the true fruit of their birth and fall into a degraded state. Rather than that, Thirumoolar declares here in grace, come to know God, the source of supreme bliss, through the Vedas, and attain liberation.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு பாடி, பாவங்காட்டி நடனமாடும் இளம்பெண்கள்,

    Young women who sing songs about God, set to music, and dance displaying appropriate expressions,

  • வரி 2

    அந்தப் பாடல்கள் மூலம் இறைவனை உணர்ந்து முக்தி பெறாமல், தங்கள் நடனத்தால் பொருள் பெறவே முயல்கின்றனர்; அவர்களின் நடனம் காண்பவரும் உண்மைப் பொருள் உணராமல் சிற்றின்பத்திலேயே இருக்கின்றனர்.

    do not, through those songs, come to realise God and attain liberation, but try only to gain wealth through their dancing; and those who watch them dance likewise fail to grasp the true meaning and remain in mere lesser pleasure.

  • வரி 3

    மோட்சம் அடைய விரும்பியும் அதற்கான ஒழுக்கங்களை (விரதங்களை) கடைப்பிடிக்காத அந்தணர்கள், பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இப்பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றனர்.

    Brahmins who desire liberation but do not keep the disciplines, the vows, it requires, and instead recite the Vedas and conduct sacrifices only for the wealth others give, become no different from these dancing women.

  • வரி 4

    பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, தங்கள் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள் அந்தணர்கள்.

    Going wherever such wealth can be found, these brahmins turn their own exalted birth into a degraded one, and live out their lives in suffering.

திருமந்திரம் பாடல் #51

1 / 6

0:000:00
வேதச் சிறப்புபாடல் 51

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com