வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்றவேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
உரை · meaning
வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை. ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளன. நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும், வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல், இறைவன் வழங்கிய அந்த வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.
There is no other dharma that God has given apart from the Vedas. Every dharma fit to be recited and lived by is found within the Vedas. All the great sages of great knowledge who came before us, without engaging in useless disputes about the why and the wherefore of the Vedas, attained liberation simply by reciting that same Veda which God gave.
வரி வாரியாக · line by line
- வரி 1
வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை.
There is no other dharma that God has given apart from the Vedas.
- வரி 2
ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளன.
Every dharma fit to be recited and lived by is found within the Vedas.
- வரி 3
நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும், வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல்,
All the great sages of great knowledge who came before us, without engaging in useless disputes about the why and the wherefore of the Vedas,
- வரி 4
இறைவன் வழங்கிய அந்த வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.
attained liberation simply by reciting that same Veda which God gave.




