திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 56

பாயிரம்வேதச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்ஆட்டும் ஆறாத அவனியில் மாட்டாதார்மேட்டு விருப்பார் விரதம்இல் லாதவர்ஈட்டும் இடம்சென் றிகலலுற் றாரே.

உரை · meaning

இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு ஒலித்துப் பாடி, அதற்கேற்ப பாவமும் காட்டி நடனமாடும் இளம்பெண்கள், அந்தப் பாடல்களின் மூலம் இறைவனை உணர்ந்து முக்தி பெறுவதற்கு முயற்சிக்காமல், தங்களின் நடனங்களின் மூலம் பொருள் பெறவே முயற்சிக்கின்றனர். அப்பெண்களின் நடனத்தைக் கண்டு களிப்பவர்களும் அதன் உண்மைப் பொருளை உணராமல், அவர்களின் நடனத்தைக் கண்டு சிற்றின்பத்திலேயே இருக்கின்றார்கள். உயர்வான வேதங்களை உயிர்கள் உய்யும் பொருட்டு உண்மைப் பொருளுணர்ந்து ஓதவேண்டிய அந்தணர்கள், மோட்சம் அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான ஒழுக்கங்களைக் (விரதங்களைக்) கடைப்பிடிக்காமல், பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இந்தப் பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றார்கள். இவர்களால் செய்யப்படும் யாகங்களைப் பெறுபவர்களும் உண்மைப் பொருள் உணராமல் உலகப் பொருள்களிலேயே மனம் செலுத்துவதால், அப்பெண்களின் நடனத்தைக் காண்பவர்கள் ஆகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் பொருளுக்கு ஆசைப்படும் அந்தணர்களோ, அப்படி பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, தங்களின் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள்.

வேதங்களில் இறைவனை அடையும் வழிகளும், அதைக் கடைப்பிடிக்கும்போது இருக்க வேண்டிய ஒழுக்கங்களும் (விரதங்களும்) கொடுக்கப்பட்டிருந்தாலும், அதைச் சிரத்தையோடு மேற்கொள்ளாமல் வெறும் சிற்றின்பத்தில் சிக்கி உலகப் பொருள்களை நாடி அலையும் உயிர்கள் தங்களின் பிறவிப் பயனை எய்யாமல் இழிந்துபோகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் பேரின்பப் பொருளான இறைவனை வேதங்கள் மூலம் உணர்ந்து முக்தியை அடைவீர்களாக என்று திருமூலர் இங்கு அருளுகின்றார்.

Young women who sing songs about God, set to music, and dance displaying appropriate expressions, do not try, through those very songs, to realise God and attain liberation; instead they try only to gain wealth through their dancing. Those who take pleasure watching these women's dancing also fail to grasp its true meaning, and remain caught in this lesser pleasure merely watching them dance. The brahmins, whose duty is to recite the exalted Vedas with true understanding for the sake of the salvation of living beings, may wish for liberation, but without keeping to the disciplines, the vows, that duty requires, and reciting the Vedas and conducting sacrifices only for the wealth others give them, they become no different from these dancing women. Those who receive the sacrifices performed by such brahmins, likewise failing to grasp the true meaning and setting their minds only on worldly wealth, become like those who merely watch the women's dancing. And the brahmins who covet the wealth these patrons give go wherever such wealth can be found, turning their own exalted birth into a degraded one, and live out their lives in suffering.

Although the Vedas lay out both the ways to reach God and the disciplines, the vows, to be kept while following them, living beings who do not take these up with real devotion, and instead remain caught in mere lesser pleasure, wandering after worldly things, fail to gain the true fruit of their birth and fall into a degraded state. Rather than that, Thirumoolar declares here in grace, come to know God, the source of supreme bliss, through the Vedas, and attain liberation.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு பாடி, பாவங்காட்டி நடனமாடும் இளம்பெண்கள்,

    Young women who sing songs about God, set to music, and dance displaying appropriate expressions,

  • வரி 2

    அந்தப் பாடல்கள் மூலம் இறைவனை உணர்ந்து முக்தி பெறாமல், தங்கள் நடனத்தால் பொருள் பெறவே முயல்கின்றனர்; அவர்களின் நடனம் காண்பவரும் உண்மைப் பொருள் உணராமல் சிற்றின்பத்திலேயே இருக்கின்றனர்.

    do not, through those songs, come to realise God and attain liberation, but try only to gain wealth through their dancing; and those who watch them dance likewise fail to grasp the true meaning and remain in mere lesser pleasure.

  • வரி 3

    மோட்சம் அடைய விரும்பியும் அதற்கான ஒழுக்கங்களை (விரதங்களை) கடைப்பிடிக்காத அந்தணர்கள், பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இப்பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றனர்.

    Brahmins who desire liberation but do not keep the disciplines, the vows, it requires, and instead recite the Vedas and conduct sacrifices only for the wealth others give, become no different from these dancing women.

  • வரி 4

    பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, தங்கள் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள் அந்தணர்கள்.

    Going wherever such wealth can be found, these brahmins turn their own exalted birth into a degraded one, and live out their lives in suffering.

திருமந்திரம் பாடல் #56

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com