தொடர்ந்து படிக்கread this section continuously
ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்கூறங்க மாகக் குணம்பயில் வார்இல்லைவேறங்க மாக விளைவுசெய் தப்புறம்பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.
உரை · meaning
ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை ஓதி அருளிய இறைவனைத் தன் உடம்பினுள்ளே ஒரு அங்கமாக வைத்து அவனுடைய தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை. அவனைத் தமது உடலிலிருந்து வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணிக்கொண்டு பலவித செயல்களைச் செய்கின்றனர். அப்படிச் செய்து கிடைத்த பயன்களையே உயர்வாகக் கருதி அதையே பெருக்கிக்கொண்டு இறைவனை உணராமலேயே வாழ்கின்றார்கள்.
வேதத்தின் ஆறு அங்கங்கள்: சிட்சை, வேதத்தின் எழுத்தையும் ஒலியையும் பற்றிச் சொல்வது; வியாகரணம், சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது; சந்தம், செய்யுள் இலக்கணத்தைப் பற்றிச் சொல்வது; சோதிடம், கோள் நிலைகளை வைத்துக் காலத்தை ஆராய்வது; நிருக்தம், வேதச் சொற்களுக்குப் பொருள் கூறுவது; கல்பம், வேதத்தின் செயல்முறைகளை உரைப்பது.
There is no one who has come to know the qualities of God, the very one who recited and graciously gave the great Vedas that stand as six limbs, by taking him as one limb within their own body. Instead, people take him as a limb existing outside their own body, and carry out all manner of actions. They think highly of only the results gained this way, and go on increasing just that, living their whole lives without ever coming to know God.
The six limbs of the Vedas: Siksha, which concerns the letters and sounds of the Vedas; Vyakarana, which examines the grammar of words; Chandas, which concerns the metre of verse; Jyotisha, which studies time through the positions of the planets; Nirukta, which gives the meaning of Vedic words; and Kalpa, which sets out the procedures of the Vedas.
வரி வாரியாக · line by line
- வரி 1
ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை ஓதி அருளியவன் இறைவன். அவ்வாறு அங்கங்கள்-- சிட்சை (எழுத்தும் ஒலியும்), வியாகரணம் (சொல் இலக்கணம்), சந்தம் (செய்யுள் இலக்கணம்), சோதிடம் (கோள் நிலைகளால் காலம் அறிதல்), நிருக்தம் (சொற்பொருள் விளக்கம்), கல்பம் (வேதச் செயல்முறை).
God is the one who recited and graciously gave the great Vedas that stand as six limbs. Those six limbs -- Siksha (letters and sound), Vyakarana (word grammar), Chandas (verse metre), Jyotisha (studying time through the planets), Nirukta (word meaning) and Kalpa (Vedic procedure).
- வரி 2
அவனைத் தம் உடலின் ஒரு அங்கமாக வைத்து, அவனுடைய தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை.
There is no one who comes to know his qualities by taking him as a limb of their own body.
- வரி 3
அவனைத் தமது உடலுக்கு வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணி, பலவித செயல்களைச் செய்கின்றனர்.
Instead, they think of him as a limb existing outside their own body, and carry out all manner of actions.
- வரி 4
அப்படிக் கிடைக்கும் பயன்களையே உயர்வாகக் கருதி, அதையே பெருக்கிக்கொண்டு இறைவனை உணராமல் வாழ்கின்றார்கள்.
They think highly of only the results gained this way, and go on increasing just that, living without ever coming to know God.
திருமந்திரம் பாடல் #55





