தொடர்ந்து படிக்கread this section continuously
இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கிவெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.
உரை · meaning
சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவனும், உணர்ந்து வேதத்தைச் சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும், வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும், அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளுபவனும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.
He dwells as the mantra-form within the beautiful, well-worded Vedas. He also dwells as awareness within the hearts of Vedic scholars who understand and recite them. He dwells as the hidden meaning within the very words that the finest Vedic scholars, walking the Vedic path, recite. And he stands as the power that formed everything, granting his grace. This is our own Lord, the three-eyed first one, Sivaperuman himself.
வரி வாரியாக · line by line
- வரி 1
சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவன் அவன்.
He dwells as the mantra-form within the beautiful, well-worded Vedas.
- வரி 2
உணர்ந்து வேதத்தைச் சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும் அவனே.
He also dwells as awareness within the hearts of Vedic scholars who understand and recite them.
- வரி 3
வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும் அவனே இருக்கிறான்.
He also dwells as the hidden meaning within the very words that the finest Vedic scholars, walking the Vedic path, recite.
- வரி 4
அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.
This is our own Lord, standing as the power that formed everything and granting his grace, the three-eyed first one, Sivaperuman himself.
திருமந்திரம் பாடல் #53





