திருமூலர் அருளிய திருமந்திரம்
4. கடுஞ் சுத்த சைவம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1438–1442 (5 பாடல்கள்)

வேடங் கடந்து விகிர்தன்றன் பால்மேவியாடம்பர மின்றி யாசாபாசஞ் செற்றுப்பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்சாடுஞ் சிவபோதகர் சுத்த சைவரே.

உடலான வைந்தையு மோரொன்று மைந்துமடலான மாமாயை மற்றுள்ள நீவப்படலான கேவலப் பாசந் துடைத்துத்திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்கமே.

சுத்தஞ் சிவனுரை தானதுட் டோயாமல்முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலமத்தகை யான்மா வரனை யடைந்தற்றாற்சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

நானென்றுந் தானென்று நாடிநான் சாரவேதானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்றானென்று நானென்றுஞ் சாற்றுகி லேனே.

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தலாற்றரி தாகிய வைந்து மடங்கிடுமேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்பார்ப்பர சாயுச்சிய மாகும் பதியே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1438

1 / 5

0:000:00
4. கடுஞ் சுத்த சைவம்பாடல் 1438

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com