திருமூலர் அருளிய திருமந்திரம்
20. அதோமுக தரிசனம்

இரண்டாம் தந்திரம் பாடல் 520–525 (6 பாடல்கள்)

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்றுவம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்லஅம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லைஉண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்மெய்யே யுரைத்திடில் விண்ணோர்தொழச் செய்வன்மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

நந்தி எழுந்து நடுவுற ஓங்கியசெந்தீக் கலந்துட் சிவனென நிற்கும்முந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்அந்தி இறைவன் அதோமுக மாமே.

அதோமுகங் கீழண்ட மான புராணன்அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலுஞ்சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

அதோமுக மாமல ராயது கேளும்அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்துஅதோமுக மாகிய அந்தமில் சத்திஅதோமுக மாகி அமர்ந்திருந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #520

1 / 6

0:000:00
20. அதோமுக தரிசனம்பாடல் 520

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com