தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
இரண்டாம் தந்திரம் பாடல் 515–519 (5 பாடல்கள்)
கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரைமுட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவைசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்கன்னங் களவு மிகுந்திடுங் காசினியென்னருமை நந்தி யெடுத்துரைத் தானே.
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றேசீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #515
1 / 5
0:000:00
19. திருக்கோயிலிழிவுபாடல் 515




