திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 517

இரண்டாம் தந்திரம்19. திருக்கோயிலிழிவு

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவைசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

உரை

சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடுகள், சிறப்பு நாள் வழிபாடுகள் (பிரதோஷம், சிவராத்திரி) ஆகியவற்றை முறையாகச் செய்யாமல் விட்டாலோ, அல்லது ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி அக்கோவில்களில் ஏதேனும் தவறாகச் செய்தால், அந்த நாட்டில் தீர்க்க முடியாத நோய்கள் பரவும், மழை பெய்யாது, அந்த நாட்டை ஆளும் அரசன் பேரரசனாக இருந்தாலும் தனது எதிரிகளைப் போரில் வெல்லும் வலிமை குறைந்துபோய்த் தன் நாட்டையே இழப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடுகள், சிறப்பு நாள் வழிபாடுகள் (பிரதோஷம், சிவராத்திரி) ஆகியவற்றை முறையாகச் செய்யாமல் விட்டாலோ,

  • வரி 2

    அல்லது ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி அக்கோவில்களில் ஏதேனும் தவறாகச் செய்தால்,

  • வரி 3

    அந்த நாட்டில் தீர்க்க முடியாத நோய்கள் பரவும், மழை பெய்யாது.

  • வரி 4

    அந்த நாட்டை ஆளும் அரசன் பேரரசனாக இருந்தாலும் தனது எதிரிகளைப் போரில் வெல்லும் வலிமை குறைந்துபோய்த் தன் நாட்டையே இழப்பான்.

திருமந்திரம் பாடல் #517

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout