திருமூலர் அருளிய திருமந்திரம்
19. தீவிரம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1523–1526 (4 பாடல்கள்)

கன்னிக்கும் பெண்பிள்ளை யப்பனார் தோட்டத்திலெண்ணிக்கு மேழேழ் பிறவி யுணர்விக்குமுண்ணிற்ப தெல்லா மொழிவ முதல்வனைக்கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்குமறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லிசிறப்பொடு பூசனை செய்யநின் றாளே.

தாங்குமின் னெட்டுத் திசைக்குந் தலைமகள்பூங்கமழ் பொய்கைப் புரிகுழ லாளோடுமாங்கது சேரு மறிவுடை யாளர்க்குத்தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவனணுகிய வொன் றறியாத வொருவனணுகு முலகெங்கு மாவியு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1523

1 / 4

0:000:00
19. தீவிரம்பாடல் 1523

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com