திருமூலர் அருளிய திருமந்திரம்
2. அசுத்த சைவம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1423–1426 (4 பாடல்கள்)

இணையார் திருவடி யேத்துஞ் சீரங்கத்திணையா ரிணைக்குழை யீரணை முத்திரைகுணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றாதணைவாஞ் சரியை கிரியையி னார்கே.

காதுபொன் னார்ந்த கடுக்க னிரண்டுசேர்த்தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்சோதனை செய்து துவாதெச மார்கராயோதி யிருப்பா ரொருசைவ ராமே.

கண்டங்க ளொன்பதுங் கண்டவர் கண்டனர்கண்டங்க ளொன்பதுங் கண்டா யரும்பொருள்கண்டங்க ளொன்பதுங் கண்டவக் கண்டமாங்கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்மோன திசையு முழுவெண்ணெண் சித்தியுமேனை நிலமு மெழுதா மறையீறுங்கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1423

1 / 4

0:000:00
2. அசுத்த சைவம்பாடல் 1423

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com