இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீள்திரு விண்ணோர் தேடுமருந் தேமாண் – ஒருவாச்சீர்தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதாவாசிறந்த மாவின் பருள்.
iruLborudhA vambalachchith thennumuru kAnIL
thiru viNNOr thEdumarun thEmAN – oruvAchchIr
thEsudharunj sendhinaRun thIrththaviRa lOngusidhA
vAsiRandha mAvin baruL.
பொருள் · meaning
இரத பந்தம் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இயற்றிய சித்திரக் கவிகளுள் ஒன்று, சித்திரக் கவி மரபில் தேர் வடிவில் அமைந்தது.
சுவாமிகளின் சொந்தச் சுவடியின்படி, இப்பாடலின் எழுத்துக்கள் கீழ்நோக்கிப் படிப்படியாக அகலமாகும் வரிசைகளில் அமைந்து தேரின் உருவைக் காட்டுகின்றன; பாடலின் தொடக்க எழுத்துக்களான 'இ', 'ரு' தேரின் இரு சக்கரங்களாக அமைந்துள்ளன.



