திருவருட்பா  78. சிவ பரம்பொருள்

உருத்தி  ரன்திரு  மால்அயன்  ஒப்பமுக்  குணமாய் 
இருத்தல்  இன்றிஅக்  குணங்களை  என்றும்ஆண்  டருளுங் 
கருத்தன்  ஆகையிற்  குணேசன்அக்  குணவிகா  ரத்திற் 
பொருத்த  மின்மையன்  ஆகையால்  புகல்குண  ரகிதன். 
1
களங்க  அக்குணம்  கடந்திருத்  தலில்குணா  தீதன் 
வளங்கொ  ளத்தகும்  உலகெலாம்  மருவிநிற்  றலினால் 
விளங்கு  விச்சுவ  வியாபிஇவ்  விசுவத்தை  யாண்டு 
துளங்கு  றாநலந்  தோற்றலின்  விச்சுவ  கருத்தன். 
2
வெய்ய  னாய்உல  கழித்தலின்  விசுவசங்  காரி 
பைய  மேலெனப்  படுவன  பலவற்றின்  மேலாம் 
ஐயன்  ஆதலிற்  பராபர  னாம்எனப்  பட்ட 
செய்ய  னாகிய  சிவபிரான்  ஒருவனுண்  டமரீர். 
3
உய்வ  தாம்இது  நம்குரு  வாணையொன்  றுரைப்பேன் 
சைவ  மாதிசித்  தாந்தத்து  மறைமுடித்  தலத்தும் 
நைவ  தின்றிஆங்  கதுவது  வாயது  நமது 
தெய்வ  மாகிய  சிவபரம்  பொருளெனத்  தெளிவீர். 
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com