திருவருட்பா  79. நடராஜ அலங்காரம்

இரண்டே  காற்கை  முகந்தந்தீர்  இன்ப  நடஞ்செய்  பெருமானீர் 
இரண்டே  காற்கை  முகங்கொண்டீர்  என்னே  அடிகள்  என்றுரைத்தேன் 
இரண்டே  காற்கை  முகம்புடைக்க  இருந்தாய்  எனைக்கென்  றிங்கேநீ 
இரண்டே  காற்கை  முகங்கொண்டாய்  என்றார்  மன்றில்  நின்றாரே. 
1
இரண்டே  காற்கை  முகங்கொண்டீர்  என்னை  உடையீர்  அம்பலத்தீர் 
இரண்டே  காற்கை  முகந்தந்தீர்  என்னை  இதுதான்  என்றுரைத்தேன் 
இரண்டே  காற்கை  முகங்கொண்டிங்  கிருந்த  நீயும்  எனைக்கண்டே 
இரண்டே  காற்கை  முகங்கொண்டாய்  என்றார்  தோழி  இவர்வாழி. 
2
ஆடுங்  கருணைத்  திருநடத்தீர்  ஆடும்  இடந்தான்  யாதென்றேன் 
பாடுந்  திருவுஞ்  சவுந்தரமும்  பழமுங்  காட்டும்  இடமென்றார் 
நாடும்  படிநன்  கருளுமென்றேன்  நங்காய்  முன்பின்  ஒன்றேயாய் 
ஈடுந்  தியபன்  னடுவுளதால்  என்றார்  தோழி  இவர்வாழி. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com