திருவருட்பா  33. உறுதி உணர்த்தல்

மஞ்சேர்  பிணிமடி  யாதியை  நோக்கி  வருந்துறும்என் 
நெஞ்சே  தணிகையன்  ஆறெழுத்  துண்டுவெண்ணீறுண்டுநீ 
எஞ்சேல்  இரவும்  பகலும்  துதிசெய்  திடுதிகண்டாய் 
அஞ்சேல்  இதுசத்  தியம்ஆம்என்  சொல்லை  அறிந்துகொண்டே. 
1
அறியாத  நம்பிணி  ஆதியை  நீக்கும்  அருள்மருந்தின் 
நெறியாம்  தணிகையன்  ஆறெழுத்  துண்டுவெண்ணீறுண்டுநீ 
எறியா  திரவும்  பகலும்  துதிசெய்  திடுதிகண்டாய் 
குறியா  திருக்கலை  என்ஆணை  என்றன்  குணநெஞ்சமே. 
2
என்றே  பிணிகள்  ஒழியும்என்  றேதுயர்  எய்தியிடேல் 
நின்றே  தணிகையன்  ஆறெழுத்  துண்டுவெண்ணீறுண்டுநீ 
இன்றே  இரவும்  பகலும்  துதிசெய்  திடுதிகண்டாய் 
நன்றேஎக்  காலமும்  வாழிய  வாழிய  நன்னெஞ்சமே. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com