திருவருட்பா  31. திருவருள் விழைதல்

தாணு  ஈன்றருள்  செல்வமே  தணிகையில்  சாமியே  நினைஏத்திக் 
காணு  வேன்இலை  அருள்இவண்  புன்மையில்  காலங்கள்  கழிக்கின்றேன் 
மாணும்  அன்பர்கள்  என்சொலார்  ஐயநீ  வந்தெனக்  கருள்வாயேல் 
நாணு  வேன்அலன்  நடுங்கலன்  ஒடுங்கலன்  நாயினும்  கடையேனே. 
1
கடைப்பட்  டேங்கும்இந்  நாயினுக்  கருள்தரக்  கடவுள்நீ  வருவாயேல் 
மடைப்பட்  டோங்கிய  அன்பகத்  தொண்டர்கள்  வந்துனைத்  தடுப்பாரேல் 
தடைப்பட்  டாய்எனில்  என்செய்வேன்  என்செய்வேன்  தளர்வது  தவிரேனே 
அடைப்பட்  டோங்கிய  வயல்திருத்  தணிகையம்  பதிஅமர்ந்  திடுதேவே. 
2
தேவ  ரேமுதல்  உலகங்கள்  யாவையும்  சிருட்டிஆ  தியசெய்யும் 
மூவ  ரேஎதிர்  வருகினும்  மதித்திடேன்  முருகநின்  பெயர்சொல்வோர் 
யாவ  ரேனும்என்  குடிமுழு  தாண்டெனை  அளித்தவர்  அவரேகாண் 
தாவ  நாடொணாத்  தணிகையம்  பதியில்வாழ்  சண்முகப்  பெருமானே. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com