திருவருட்பா  13. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்

தாயின்  மேவிய  தற்பர  மேமுல்லை 
வாயின்  மேவிய  மாமணி  யேஉன்தன் 
கோயின்  மேவிநின்  கோமலர்த்  தாள்தொழா 
தேயின்  மேவி  இருந்தனன்  என்னையே. 
1
தில்லை  வாய்ந்த  செழுங்கனி  யே  திரு 
முல்லை  வாயில்  முதல்சிவ  மூர்த்தியே 
தொல்லை  யேன்உன்தன்  தூய்திருக்  கோயிலின் 
எல்லை  சேரஇன்  றெத்தவம்  செய்ததே. 
2
வளங்கொ  ளும்முல்லை  வாயிலில்  மேவிய 
குளங்கொ  ளும்கண்  குருமணி  யேஉனை 
உளம்கொ  ளும்படி  உன்திருக்  கோயில்இக் 
களங்கொள்  நெஞ்சினன்  கண்டதும்  கண்டதே. 
3
மலைவி  லாமுல்லை  வாயிலில்  மேவிய 
விலையி  லாமணி  யேவிளக்  கேசற்றும் 
குலைவி  லாதவர்  கூடும்நின்  கோயிலில் 
தலைநி  லாவத்த  வம்என்கொல்  செய்ததே. 
4
சீர்சி  றக்கும்  திருமுல்லை  வாயிலில் 
ஏர்சி  றக்கும்  இயன்மணி  யேகொன்றைத் 
தார்சி  றக்கும்  சடைக்கனி  யேஉன்தன் 
ஊர்சி  றக்க  உறுவதெவ்  வண்ணமே. 
5
சேல்கொள்  பொய்கைத்  திருமுல்லை  வாயிலில் 
பால்கொள்  வண்ணப்  பரஞ்சுட  ரேவிடை 
மேல்கொள்  சங்கர  னேவிம  லாஉன்தன் 
கால்கொள்  அன்பர்  கலங்குதல்  நன்றதோ. 
6
வண்ண  மாமுல்லை  வாயிலின்  மேவிய 
அண்ண  லேஅமு  தேஅரை  சேநுதல் 
கண்ண  னேஉனைக்  காணவந்  தோர்க்கெலாம் 
நண்ண  ருந்துயர்  நல்குதல்  நன்றதோ. 
7
மண்ணின்  ஓங்கி  வளர்முல்லை  வாயில்வாழ் 
கண்ணுன்  மாமணி  யேகரும்  பேஉனை 
எண்ணும்  அன்பர்  இழிவடைந்  தால்அது 
பண்ணும்  நின்அருள்  பாரிடை  வாழ்கவே. 
8
தீதி  லாததி  ருமுல்லை  வாயில்வாழ் 
கோதி  லாதகு  ணப்பெரும்  குன்றமே 
வாதி  லாதுனை  வாழ்த்தவந்  தோர்தமை 
ஏதி  லார்என்றி  ருப்பதும்  என்கொலோ. 
9
தேசு  லாவிய  சீர்முல்லை  வாயில்வாழ் 
மாசி  லாமணி  யேமருந்  தேசற்றும் 
கூசி  டாமல்நின்  கோயில்வந்  துன்புகழ் 
பேசி  டாத  பிழைபொறுத்  தாள்வையே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com