திருவருட்பா  123. வருவார் அழைத்துவாடி

வருவார  ழைத்துவாடி  வடலூர்  வடதிசைக்கே 
வந்தாற்  பெறலாம்நல்ல  வரமே. 
1
திருவார்பொன்  னம்பலத்தே  செழிக்குங்குஞ்  சிதபாதர் 
சிவசிதம்  பரபோதர்  தெய்வச்  சபாநாதர்  வருவார் 
2
சிந்தை  களிக்கக்கண்டு  சிவானந்த  மதுவுண்டு 
தெளிந்தோர்எல்  லாரும்தொண்டு  செய்யப்  பவுரிகொண்டு 
இந்த  வெளியில்நட  மிடத்துணிந்  தீரேஅங்கே 
இதைவிடப்  பெருவெளி  இருக்குதென்  றால்இங்கே  வருவார் 
3
இடுக்கி  லாமல்இருக்க  இடமுண்டு  நடஞ்செய்ய 
இங்கம்  பலம்ஒன்றங்கே  எட்டம்  பலம்உண்டைய 
ஒடுக்கில்  இருப்பதென்ன  உளவுகண்டு  கொள்வீர்என்னால் 
உண்மைஇது  வஞ்சமல்ல  உம்மேல்  ஆணை  என்றுசொன்னால்  வருவார் 
4
மெல்லியல்  சிவகாம  வல்லி  யுடன்களித்து 
விளையா  டவும்எங்கள்  வினைஓ  டவும்ஒளித்து 
எல்லையில்  இன்பந்தரவும்  நல்லசம  யந்தானிது 
இங்குமங்கும்  நடமாடி  இருக்கலாம்  என்றபோது 
வருவார  ழைத்துவாடி  வடலூர்  வடதிசைக்கே 
வந்தாற்  பெறலாம்நல்ல  வரமே. 
5

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com